74

1"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே"

எனவும் வரும்.

பிரிந்து வருகென்றற்குச் செய்யுள்:

2"சென்றே பகைவென்ற திண்படை வாணன் செழுந்தஞ்சைசூழ்
நன்றே தருவையை நாடனை யாய்நம தாருயிர்போல்
ஒன்றே யென துரை யூங்குயர் சோலையி னூடொளித்து
நின்றே வருவலிங் கேவிளை யாடுக நீசிறிதே"

என வரும்.

இடமணித் தென்றற்குச் செய்யுள்:

3"மணிபொன் சொரியுங்கை வாணன்றென் மாறை மருவினர்போல்
தணிபொன் சொரியுந் தடமுலை யாயுயர் சந்தமுந்தி
அணிபொன் சொரியு மருவியெஞ் சார லகத்தலர்தேங்
கணபொன் சொரியுநன் சாரன்மென் காந்தளங் கையகத்தே"

எனவும்,

"நெடுவே றுடக்கிய நீர்க்குமதி காதல்
வடிவே றுடக்கிய நீர்மாதோ-நெடுவேய்க்
கணமா மழைக்குவட்டெங் கார்வரைப்பூஞ் சாரன்
மணநாறு நுங்குன்றின் வந்து"

எனவும் வரும். இவற்றுள், முன்னைய மூன்றும் ஐயந்தீர்த்தற்குரிய; பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்குரிய எனக்கொள்க.

(13)

3. தெளிவு

தெளிவு இன்னதென்பது

130. தலைவன் மாற்றந் தலைவி தேற்றந்
தெளிவா மென்பர் தெளிந்திசி னோரே.

(இ - ம்.) தெளிவு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைமகன் சொல்லைத் தலைமகள் தெளிதலைத் தெளிதலென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

அதற்குச் செய்யுள்:


1. குறு. செ: 40.

2. த. கோ. செ: 24.

3. த. கோ. செ: 25.