77

1இக் கிளவி"பிரிந்தவழிக் கலங்கல்" என்பதனாற் கொள்ளப்பட்டது.

பிரிவுழிக் கலங்கலின் விரி

133. ஆய வெள்ளம் வழிபடக் கண்டிது
மாயமோ வென்றலும் வாயில்பெற் றுய்தலும்
பண்புபா ராட்டலும் பயந்தோர்ப் பழிச்சலுங்
கண்படை பெறாது கங்குனோ தலுமெனும்
ஐந்தும் பிரிவுழிக் கலங்கல்விரி யாகும்.

(இ-ம்) பிரிவுழிக்கலங்கலின் விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) தலைமகளை ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவென்றல் முதலாகக் கண்படை பெறாது கங்குனேர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் பிரிவுழிக் கலங்கலின் விரியாம் என்றவாறு.

ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவென்றற்குச் செய்யுள்:

2"சீயங்கொ லோவெனத் தெவ்வென்ற வாணன்றென்

மாறைவையைத்

தோயங்கொ லோவெனு நேயநம் பால்வைத்துச்

சோலைமஞ்ஞைவ்

யாயங்கொ லோவெனு மாயத்துள் ளாளிவ்

வரிவையென்ன

மாயங்கொ லோநெஞ்ச மேமணம் போலிங்கு

வந்துற்றதே"

எனவும்,

"மனவே ரல்குன் மடந்தை கூட்டங்
கனவே தெரியினும் யாவது
நனவே தெரியினு நண்ணலோ வரிதே"

எனவும் வரும்.

வாயில்பெற்றுய்தற்குச் செய்யுள்:

3"பெருமான் மருந்தொன்று பெற்றனம்

யாநெஞ்சம் பேதுறல்பார்

மருமான் வரோதயன் வாணன்றென் மாறை

மணங்கமழ்பூந்


1. தொல். பொருள், களவியல், சூ: 102.

2. த. கோ. செ. 29.

3. த. கோ. செ: 30