88

பாங்கன் தலைவியை வியத்தற்குச் செய்யுள்:

1"வெங்கோன் மழைபொழி வானவர் போர்வென்ற

மீனவர்தஞ்

செங்கோன் முறைமை செலுத்திய வாணன்றென் 

மாறைவெற்பில்

நங்கோன் மெலிய நலிகின்ற காமவெந்

நஞ்சினையிப்

பைங்கோன் மணிவளை யார்தணி யாரல்லர் 

பார்வை கொண்டே"

எனவும்,

2"துறைமேய் வலம்புரி தோய்ந்து மணலுழுத

தோற்ற மாய்வான்

பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்டாது 

போர்க்குங் கானல்

நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண்

செய்த

உறைமலி யுய்யாநோ யூர்சுணங்கு மென்முலையே

தீர்க்கும் போலும்"

எனவும் வரும்.

பாங்கன் தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறற்குச் செய்யுள்:

3"வளங்கனி மாறை வரோதயன் வாணன் மலையவெற்பா
உளங்கனி காத லுடனின்ற தானின் னுடலமெல்லாங்
களங்கனி போலக் கருதிவெண் கோட்டுக் களிறுண்டதோர்
விளங்கனி போல்வறி தாநிறை வாங்கிய மென்கொடியே"

என வரும்.

தலைவன் குறிவழிச் சேறற்குச் செய்யுள்:

4"புறங்கூ ரிருட்கங்குல் போன்றக நண்பகல்

போன்ற பொங்கர்

நிறங்கூர் படைக்கண்ணி நின்றன ளேநிழ

லைச்சுளித்து

மறங்கூர் களிற்றண்ணல் வாணன்றென் மாறையில்

வாணுதலாள்

அறங்கூர் மனத்தரு ளானின்ற தாமென

தாருயிரே"

என வரும்.


1 த. கோ. செ: 55.

2 சிலப். கானல். செ: 8.

3. த. கோ. செ: 56.

4. த. கோ. செ: 57.