89

தலைவன் தலைவியைக் காண்டற்குச் செய்யுள்:

1"பாகையுந் தேனையும் போன்மொழி யார்தமிழ்ப்

பைந்தொடையும்

வாகையுஞ் சூடிய வாணன்றென் மாறை

வளமுமவன்

ஈகையும் போலு மெழிலியை நோக்கி

யிரங்குபுள்ளுந்

தோகையும் போனின்ற வாதனி யேயிந்தச்

சோலையிலே"

என வரும்.

தலைவன் கலவியின் மகிழ்தற்குச் செய்யுள்:

2"யாரும்பர் தம்பத மென்போல வெய்தின ரிம்பரம்பொன்
வாருந் துறைவையை சூழ்தஞ்சை வாணன் மலயவேற்பில்
தேருந் தொறுமினி தாந்தமிழ் போன்றிவள் செங்கனிவா
யாருந் தொறுமினி தாயமிழ் தாமென தாருயிர்க்கே"

என வரும்.

புகழ்தற்குச் செய்யுள்:

3"தழல்கண்ட தன்ன கலிவெம்மை யாறத்தன் தண்ணளியால்
நிழல்கண்ட சந்திர வாணன்றென் மாறை நிழல்பொலியுங்
கழல்கண்ட தன்ன கதிர் முத்த மாலிகைக் காரிகைநின்
குழல்கண்ட பின்னல்ல வோவற னீருட் குளித்ததுவே"

என வரும்.

தலைவன் தலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தற்குச் செய்யுள்:

4"என்கா தலினொன் றியம்புகின் றெனிங் கினிவருங்கால்
நின்கா தலியொடு நீவரல் வேண்டு நிலமடந்தை
தன்கா தலன் றஞ்சை வாணன்றென் மாறைத்தண் டாமரைவாழ்
பொன்காதல் கொண்டு தொழுஞ்சிலம் பாரடிப் பூங்கொடியே"

எனவும்,


1. த. கோ. செ: 58.

2. த. கோ. செ: 59.

3. த. கோ. செ: 60.

4. த. கோ. செ: 61.