93
புண்டலை வேலினுங் கண்சிவப் பாரப்

பொலஞ்சுனைத்தேன்

கொண்டலை நீர்குடைந் தோவிவள் மேனி

குழைந்ததுவே"

எனவும்,

1"கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலும்
நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே
வாங்கமை மென்றோள் மடந்தை
யாங்கா யினள்கொ லென்னுமென் னெஞ்சே"

எனவும் வரும். பிறவுமென்ன.

ஐயந் தீர்தற்குச் செய்யுள்:

2"திளைக்குந் திரைமே லுனக்குமுன் றோன்றலிற்

செம்பொன்வெற்பை

வளைக்கும் பிரான்முடி வைகுத லாற்றஞ்சை

வாணன் மண்மேல்

விளைக்கும் புகழ்போல் விளங்குத லாற்செக்கர்

விண்பிறைகார்

தளைக்குங் குழற்றிரு வேதொழ வேதகுந்

தன்மையதே"

எனவும்,

3"முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே
யின்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண்-மன்னும்
பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற்
பெருகொளியால் மிக்க பிறை"

எனவும் வரும், பிறவுமன்ன.

மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடலுட்

சுனைநயப்புரைத்தற்குச் செய்யுள்:

4"பூட்டிய வார்சிலை வீரரை வென்றெப் பொருப்பினுஞ்சீர்
தீட்டிய வாணன்றென் மாறையன் னீரிதழ்ச் செம்மையுமை


1. தொல், பொருள், களவியல், 23ஆம் சூ. உரைமேற்கோள்.

2. த. கோ. செ: 64.

3. தொல், பொருள், களவியல், 23.ஆம் சூ. உரைமேற்கோள்.

4. த. கோ. செ: 65.