காடிறந்தோரே’’ எனவும், மக்கள்-பொங்கல் நல்கல் முகம் அஃகம் எனவும், அருளல்லதியாதெனின், அழுக்காறென ஒருபாவி எனவும் வந்தனவற்றுள், சுடர்த்தொடீ என விளித்த வழி ‘டீ’ என்னும் எழுத்துத் தோழி நிற்கும் சேய்மைக்கு ஏற்ப டீஇ என மிக்கிசைப்பினும், அதுவல்லின உயிர்மெய்நெடில் இரண்டு மாத்திரை என்னும் இலக்கணமும், காடிறந்தோரே ‘ரே’ என்பது கூற்றுவயின் ஓரளபாக இசைப்பினும் அஃது இடையின உயிர் மெய் நெடில்-இரண்டு மாத்திரை என்னும் இலக்கணமும் மாறுபடல் இல்லை. அவ்வாறே மக்கள், பொங்கல், நல்கல், முகம், அஃகம் என்பனவற்றுள் ின்ற ககரம், மேல் நின்ற புள்ளிகளான் ஓசைதிரிந்து நிற்பினும் அது வல்லின உயிர்மெய்க்குறில் ஒரு மாத்திரை என்னும் இலக்கணத்திற்றிரிதலில்லை. ஆடியாது, கொக்குக்குறிது - என்பவற்றுள் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஓசைகுன்றி நிற்பினும், சுஃறென்னும் என்பதனுள் ஆய்தம் ஓசைமிக்குநிற்பினும் அவை சார்பெழுத்து என்னும் இலக்கணத்தில்திரிதலில்லை. இனி அருளல்லதியாதெனின் - அழுக்காறென ஒருபாவி எனச் செய்யுட்கண் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் எண்ணப்பெறாமலும், குற்றியலுகரம் வடிவு திரிந்தும், தோன்றாமல் மறைந்தும் மாத்திரையிழந்தும் நிற்பினும், அருளல்லது எனவும் அழுக்காறு எனவும் பொருள் திரியாது நிற்றலின் சார்பெழுத்தென்னும் இலக்கணமும் அரைமாத்திரை என்னும் இலக்கணமும் திரிதல் இல்லை என்க. |