120மொழிமரபு

சைனம்-சயினம், சையம், சௌரியம் எனச்சிதைந்து வரும் வடசொற்கள்
இயைந்தன அன்மையின் கொள்ளப்பெறா என்க.
 

சூ. 63:

உஊ ஒஓ என்னும் நான்குயிர்

வஎன் எழுத்தொடு வருதல் இல்லை

(30)
 

க-து: 

வகரமெய்    எட்டு   உயிரிசைகளொடு   கூடி   உயிர்மெய்யாய்
வருமென்கின்றது.
 

பொருள்:  வகரமென்னும் மெய்யெழுத்து   உஊஒஓ  என்னும்  நான்கு
உயிரிசைகளொடு கூடிமொழிக்கு முதலாக வருதலில்லை. ஏனையெட்டொடும்
கூடிவரும் என்றவாறு. ஒடுவை உயிரொடு கூட்டுக.
 

எ - டு:  வளை, வானம், விரல், வீடு, வெள்ளம்,  வேந்தன்,  வையம்,
வௌவுதல் எனவரும்.
 

சூ. 64:

ஆஎ,

ஒஎனும் மூவுயிர் ஞகாரத் துரிய 

(31)
 

க-து:

ஞகரமெய் மூன்று உயிரிசைகளொடு கூடிவரும் என்கின்றது.
 

பொருள்:  ஞகாரம் என்னும்   மெய்   மொழிமுதலாதற்கு  ஆ, எ, ஒ
என்னும் மூன்று உயிரோசைகளும் உரியவாம்.
 

ஞகாரத்‘துரிய’ எனவே  உரிமையின்றி  நகரமெய்யின்  திரிபாக  வரும்
ஞகரத்திற்கு அகர இகர ஏகாரங்கள் சிறுபான்மை உரியவாதல் கொள்க.
 

எ - டு:  ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்  எனவரும்.  நகரத்  திரிபாகிய
ஞகரம்; (நரல)  ஞரல  (நமன்)  ஞமன் (நிமிரு)  ஞிமிரு (நேயம்)  ஞேயம்
‘ஞிமிறு’   வண்டாயின்    ‘‘கடிசொல்லில்லை’’    என்பதனாற்  கொள்க.
ஞமலி=நாய்.
 

சூ. 65: 

ஆவோ டல்லது யகர முதலாது 
(32)
 

க-து: 

யகரமெய் மொழி முதலாமாறு கூறுகின்றது.
 

பொருள்:  யகரமெய் ஆ   என்னும்  உயிரிசையோடல்லது   ஏனைய
உயிரிசைகளொடு கூடிமொழி முதலாகாது. எ - டு யா, யாழ், யானை, யாங்கு
எனவரும்.  ‘யவனர்’  என்பது  திசைச்  சொல்.  யவன்  என்பது  யாவன்
என்பதன்  விகாரம்.  இனி,  யூபம்  என்னும்  “எழுத்தொடு    புணர்ந்த’’
வடசொல் புறனடையாற் கொள்ளப்படும். யுகம், யூகம், யோகம், யௌவனம்
முதலியவை இயையாது சிதைந்தனவாதலின் கொள்ளப்பெறா என்க.