xviii |
இக்கருத்துக்கு ‘ஏனை வகரம் இன்னொடு சிவணும்’ (நூ. 184) என்பதும் அரணாகிறது. |
உயிர்மயங்கியல்:- |
நூ.221: வாழிய என்பது செய்க என்கிற கிளவியாகிய ககர ஈற்று வியங்கோளே என்ற செய்தி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நூ.228: ‘நிலாவென்கிளவி அத்தொடும் சிவணும்’ என்ற பாடத்தால் மிகையாற் கொள்ளப்பட்ட செய்திகள் நூற்பா வாயிலாகவே பெறப்பட்டுள்ளன. நூ.259: அதாஅன்று என்ற சொல்நிலை ஆய்ந்து நிறுவப்பட்டுள்ளது. |
புள்ளிமயங்கியல்:- |
நூ. 309: முரண்கடுமை - முரட்கடுமை. பொருள்வேறுபாடு சுட்டியதிறம் நன்று. நூ. 316: இலம்பாடு என்ற உரிச்சொல் பற்றிய பல செய்திகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. நூ. 318: எண்ணுப்பெயர் அடையடுத்துழிப் பொருள் வேறாகி நிற்கும் திறன் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. நூ. 351: தான், பேன், கோன் என்ற சொற்கள் தாயன், பேயன், கோவன் என்ற சொற்களின் இடைக்குறை என்ற ஆராய்ச்சி நுட்பமானது. நூ. 359: ‘அதன்வினை கிளப்பின்’ என்ற பாட வேறுபாடு மிகப் பொருத்தமாவதனொடு பலவித ஐயங்களையும் அகற்றுகிறது. இப்பாடத்தை ஆசிரியர் விரிவான விளக்கத்தொடு நிறுவிய திறன் நயக்கத்தக்கது. |
குற்றியலுகரப் புணரியல்:- |
நூ. 472: ‘ஈறுசினை ஒழியா’ என்ற பாடம் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்க உதவுவது. நூ. 480: வழங்கியல் மா, வரையறுத்த நீட்டல் அளவையினைக் குறித்து வரும் மா என்னும் சொல் - என்ற சொற்பொருளும் அதன் தொடர்பான விளக்கங்களும் இன்றியமையாத தெளிவு தருவன. நூ. 481: உம், கெழு என்ற சொற்களின் உண்மை நிலையும் இந்நூற்பாவில் சுட்டப்படும் அவற்றின் பொருண்மை நிலையும் பற்றிய விளக்கம் செவ்விது. நூ. 482: நெறிப்பட வாராக் குறைச் சொற் கிளவி என்ற தொடரின் பொருளும் விளக்கமும் எடுத்துக் காட்டும் மிகத் தெளிவாக உள்ளன. அவ்வைந்து, ஒன்னொன்பது என்ற வழக்காற்றுச் சொற்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை நன்று. |
இதுகாறும் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் தொல்காப்பிய எழுத்துப்படலம் பற்றிய முன்னைய உரைகளில் காணப் |