பொருள்: ஒளகாரஉயிர் தவிர்ந்த ஏனைய பதினொரு உயிர் எழுத்துக்களும் மொழி இறுதிக்கண் நிற்றற்கு ஆகும். |
எ - டு: ஆஅ, ஆ, ஈஇ, ஈ, ஊஉ, ஊ, ஏஎ, ஏ, ஐ, ஓஒ, ஓ எனவரும். |
குற்றுயிர்கள் தனித்து ஈறாகா; அளபெடையின்கண் ஈறாகும் என்க. இனி “ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே” (இடை-33) எனப்பின்னரும் வலியுறுத்துவார். ‘‘ஒள” என்பது குறிப்பிடைச் சொல்லாகவன்றிப் பெயராயும் வினையாயும் வாராமையான் ‘‘ஒள’’ எஞ்சிய இறுதியாகும் என்றார். இது மெய்யொடு கூடி ஈறாமாறு மேற்கூறுதலான் ஈண்டுக் கூறியது தனித்து ஈறாக நிற்கும் நிலையை என்பது புலனாம். |
சூ. 70: | கவவோ டியையின் ஒளவு மாகும் |
(37) |
க-து: | ஒளகார உயிர் மெய்யொடு கூடி ஈறாம் என்கின்றது. |
பொருள்: மேல்விலக்கப்பட்ட ஒளகாரம் ககர வகர மெய்களொடு இணைந்த உயிர்மெய்யாயின் ஈறாக நிற்றற்காகும். |
உயிர்மெய் ஓரெழுத்தே எனினும் ஓசைபற்றிப் புணரியல் விதி கூறுதலானும் ‘‘உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே’’ என்பது இலக்கணமாகலானும் ஈண்டுக்கூறும் மொழிநிலைகள் புணரியலுக்குக் கருவிகளாகலானும் ‘‘கவவோ டியையின் ஒளவு மாகும்’’ என்றார். |
எ - டு : கௌ - வௌ எனவரும். இஃது ஓரெழுத்தொரு மொழிக்கண்ணன்றி வராமையான், ‘ஒளவும்’ என இழிவு சிறப்பும்மை கொடுத்தோதினார்; அன்றி எச்ச உம்மை எனினும் ஆம். |
‘‘ஒள’’ அதிகாரப்பட்டமையானும் இறுதிநிலை பற்றிய இலக்கணமாகலானும் இறுதி நிரலாக இனிவருவனவற்றைக் கூறுகின்றார். (இறுதிநிரல் = இறுதியைத் தொடக்கமாக எண்ணுதல்) |
சூ. 71: | எஎன வருமுயிர் மெய்யீ றாகாது |
(38) |
க-து: | எகர உயிர் பற்றியதொரு விதி கூறுகின்றது. ஐயமகற்றுதலுமாம். |
பொருள்: எ எனப்படும் உயிர்எழுத்து மெய்யொடு கூடி மொழியீறாகவராது. |