126மொழிமரபு

பொருள்:பகரமெய்யை ஊர்ந்துவரும் முற்றுகரச்சொல் ஒன்றே.  அஃது
தொழிற்பெயர்,   ஏவல்வினை    ஆகிய     இரண்டிடத்தும்     நிற்கும்
பொருண்மையுடையதாகும் எனக் கூறுவர் புலவர்.
 

எ - டு:  தபு - நீதபு! எனவரும். த =கெடுவாயாக!  பெயராயின்  தவறு
என்பது பொருளாம். அது இக்காலத்துத் ‘தப்பு’ என வழங்கும்.
 

‘இருவயின் நிலையும்  பொருட்டாகும்’  என்பதற்கு உரையாசிரியன்மார்
தன்வினையும் பிறவினையும் என  இருபொருட்டாகும் என்பர். அப்பொருள்
எடுத்தல்,  படுத்தல்   என்னும்   ஓசைக்குறிப்பாற்   பெறப்படுவனவன்றிச்
சொல்லாற்றலாற் பெறப்படுவனவல்ல. அங்ஙனம் குறிப்பாற்பொருள் தருவன
கழி, வெளு முதலாகப் பல உளவாதலின் அவர் உரை பொருந்தாமையறிக.
 

சகரபகரங்களை  விதந்து  கூறினமையின்  ஏனையவை  பலவாக வரும்
என்க.
 

எ - டு:  நகு,  புகு, வகு, அது,  இது, உது, அறு,  இறு, பொறு, அடு,
விடு, கொடு, நடு எனவரும்.
 

சூ. 77:

எஞ்சிய வெல்லாம் எஞ்சுத லிலவே
(44)
 

க-து:

மேல்   எடுத்தோதியவையல்லாத   உயிர்கள்   மெய்யொடு  கூடி
ஈறாமாறு கூறுகின்றது.
 

பொருள்: ‘கவவோடியையின்’ ஒளவுமாகும் என்பது முதலாக இதுகாறும்
விதந்து  கூறப்பட்ட  ஒள,  எ, ஓ,   ஏ, ஒ உ, ஊ  என்பவை   தவிர்ந்த
அஆஇஈஐ   ஆகிய   ஐந்து   உயிர்களும்   எல்லா மெய்களோடும் கூடி
ஈறாதற்குக் குறைவில.
 

எஞ்சியவை  எல்லா  மெய்யொடும்  ஈறாம்  என்றாற்போலக்  கூறாமல்
‘‘எஞ்சுதல் இல’’ என எதிர்மறை முகத்தாற் கூறினமையின்  ஙகரம்  ஒழிந்த
ஏனைய மெய்களே கொள்க.
 

எ - டு:  தக, பச, தட,  அண, புத, தப, கம, துய,  துர, கல, தவ, மழ,
உள,   பிற,  அன்ன  என  அகரம்  வரும்.  நகரம் - நக்கீரன் நப்பசலை
என்றாற்போல  இடைச்சொல்லாய்   அகரத்தொடு   வரும்.  ஞகரத்தொடு
அகரம் வந்துழிக்காண்க. கா, சா, தடா, நுணா, தா, நா, பா, மா,  யா, அரா,
உலா, உவா, விழா, தளா, புறா, கனா என ஆகாரம்  வரும்.  ஞகரத்தொடு
வருவழிக் கண்டுகொள்க. ஆகி, பாசி, கடி, அணி, மதி, இப்பி, உமி, நாயி,