128மொழிமரபு

பொருள்:ஞகாரம் மேற்கூறிய  பகரஉகரத்தொடு  ஒத்த   நிலைமைத்து,
ஆயினும் இது அதுபோலப் பொருள் இரண்டாகாது. என்றது;  ஞகரப்புள்ளி
தபு என்பதுபோல ஒருசொல்லில் மட்டும் ஈறாகவரும்.  எனினும் அதுபோல
இது இருபொருள் தாராது என்றவாறு.
 

‘அப்பொருள்’ என்றது அதுபோல என்னும் பொருட்டாய்  நின்றது. இவ்
ஆடையும் அந்நூலானியன்றது என்புழிப்போல  என்க. இவனை  என்பதில்
ஐகாரம் சாரியை.
 

எ - டு :  உரிஞ் எனவரும்.
 

உவமப்படுத்து    மாட்டேற்றுதற்பொருட்டு   நகரத்தை   முற்கூறினார்.
நகரஞகர  ஈற்றனவாய்ச்  செய்யுளீட்டச்  சொல்லாக  வடசொற்  கிளவிகள் விரவுங்கால் தமிழ்ச் சொற்கள் இவையே  என  அறிதற்பொருட்டு இவற்றை எடுத்தோதினார் என்க.
 

சூ. 81:

வகரக் கிளவி நான்மொழி ஈற்றது
(48)
 

க-து:

வகரப்புள்ளி நான்கு சொற்களில் ஈறாகவரும் என வரையறை
கூறுகின்றது.
 

பொருள்: வகரமாகிய   புள்ளிஎழுத்து   நான்கு   சொற்களை  ஈறாக
உடையதாகும்.
 

எ - டு :  அவ், இவ், உவ், தெவ் எனவரும்.
 

கதவு,  புதவு,  வரவு  என்றாற்போல  வருவனவற்றுள்  இறுதி  உகரம்
சாரியை   என்பதை   உணர்ந்தோரும்   இவை   வகரஈறாம்    கொல்?
எனமயங்குதலின்  ஆண்டு நிற்கும் வகரமெய் சாரியை உகரத்தை ஏற்கவந்த
உடம்படுமெய்     என்பதை   உணர்த்த   வகர   ஈற்றுச்    சொற்களை
வரையறுத்தோதினார் என அறிக.
 

சூ. 82: 

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப

புகரறக் கிளந்த அஃறிணை மேன
(49)
 

க-து:

ஒரோ காரணங்களைக் கருதிச்  சில  சொற்களை  வரையறுத்த
அதிகாரத்தான் னகர ஒற்று  ஈறாகும்  சொற்கள்  இவ்வாற்றான்
இத்துணை என வரையறை கூறுகின்றது.
 

இதன்பயன், மகர னகரங்கள்  ஒன்றற்கொன்று  மாற்றெழுத்தாக  வரும்
என்பதும், னகரஈற்று அஃறிணைச் சொற்களுள்  சில  மாற்றெழுத்துப்பெற்று வாரா என்பதும் உணர்த்துதலாம்.