எனவே, வேற்றுமையாயின் (வற்றுச்) சாரியை வருமென்பதாயிற்று. உயர்திணைவிதி மேல் விதந்து கூறப்படுதலின் இஃது அஃறிணைக்கு என்பது பெறப்படும். உருபியல் நிலைதலாவது, வற்றுச்சாரியை பெறுதலும் இறுதிக்கண் உம்முப் பெறுதலுமாம். | எ.டு :எல்லாக்குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் என அல்வழிக்கண் சாரியை இன்றிப் புணர்ந்தது. மகரம் பொதுவிதியாற் கெட்டு, வல்லெழுத்து மிக்கது என்க. எல்லாவற்றுக்கோடும், செவியும், தலையும், புறமும் என வேற்றுமைக்கண் வற்றும் இறுதிக்கண் உம்மும் பெற்று முடிந்தது. | அடுத்த நூற்பா ‘‘மெல்லெழுத்து மிகினும் மான மில்லை’’ எனவருதலின் ஈண்டு வல்லெழுத்து மிகுதல் உய்த்துணரப்பட்டது. (இவ்வாறு விதிபெறப்பட வைப்பது இவ்வாசிரியரியல்பென அறிக) பிறகணங்கள் வரின் மேற்கூறியாங்குக் கொள்க. | எ.டு :எல்லாநாளும், மணியும், யாழும், வாயிலும், அவிலும் எனவரும். | சூ. 323 : | மெல்லெழுத்து மிகினும் மான மில்லை | (28) | |
க-து : | எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. | | பொருள் :மேற்கூறிய எல்லாம் என்னும்சொல் வருமொழி வன்கணம்வரின் மெல்லெழுத்து மிகுதலும் குற்றமில்லை. | எ. டு:எல்லாங்குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் எனவரும். |
சூ. 324 : | உயர்திணை யாயின் உருபியல் நிலையும் | (29) | |
க-து : | எல்லாம் என்னும் பொதுப்பெயர் உயர்திணையாய் நின்று இருவழியும் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :எல்லாம் என்னும் பொதுப்பெயர் உயர்திணைப் பொருட்டாய் வருமாயின் இருவழியும் உருபு புணர்ச்சிக்கு ஓதிய இயல்பிற்றாய் நிற்கும். வேற்றுமை யல்வழிச்சாரியை நிலைபெறாது. இருவழியும் என்பதும், வேற்றுமை யல்வழிச்சாரியை நிலையாது என்பதும் அதிகாரத்தாற் பெறப்பட்டன. | உருபியல் நிலையலாவது: ‘உயர்திணை யாயின் நம்மிடை வருமே’ என்ற இலக்கணம் பெற்று நிற்றலாம். |
|
|