நூன்மரபு274

எனவே,  வேற்றுமையாயின்  (வற்றுச்)   சாரியை   வருமென்பதாயிற்று.
உயர்திணைவிதி  மேல்  விதந்து  கூறப்படுதலின்   இஃது  அஃறிணைக்கு
என்பது  பெறப்படும்.  உருபியல் நிலைதலாவது, வற்றுச்சாரியை பெறுதலும்
இறுதிக்கண் உம்முப் பெறுதலுமாம்.
 

எ.டு :எல்லாக்குறியவும்,    சிறியவும்,   தீயவும்,   பெரியவும்   என
அல்வழிக்கண் சாரியை இன்றிப் புணர்ந்தது. மகரம் பொதுவிதியாற் கெட்டு,
வல்லெழுத்து  மிக்கது   என்க. எல்லாவற்றுக்கோடும்,  செவியும், தலையும்,
புறமும்  என  வேற்றுமைக்கண்  வற்றும்  இறுதிக்கண்  உம்மும்  பெற்று
முடிந்தது.
 

அடுத்த நூற்பா ‘‘மெல்லெழுத்து மிகினும் மான மில்லை’’ எனவருதலின்
ஈண்டு வல்லெழுத்து மிகுதல் உய்த்துணரப்பட்டது. (இவ்வாறு விதிபெறப்பட
வைப்பது    இவ்வாசிரியரியல்பென    அறிக)    பிறகணங்கள்    வரின்
மேற்கூறியாங்குக் கொள்க.
 

எ.டு :எல்லாநாளும், மணியும், யாழும், வாயிலும், அவிலும் எனவரும்.
 

சூ. 323 :

மெல்லெழுத்து மிகினும் மான மில்லை (28)
 

க-து :

எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறிய     எல்லாம்    என்னும்சொல்    வருமொழி
வன்கணம்வரின் மெல்லெழுத்து மிகுதலும் குற்றமில்லை.
 

எ. டு:எல்லாங்குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் எனவரும்.
 

சூ. 324 :

உயர்திணை யாயின் உருபியல் நிலையும் (29)
 

க-து :

எல்லாம்    என்னும்  பொதுப்பெயர்   உயர்திணையாய்    நின்று
இருவழியும் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :எல்லாம்    என்னும்     பொதுப்பெயர்    உயர்திணைப்
பொருட்டாய்   வருமாயின்   இருவழியும்   உருபு   புணர்ச்சிக்கு  ஓதிய
இயல்பிற்றாய்   நிற்கும்.   வேற்றுமை   யல்வழிச்சாரியை   நிலைபெறாது.
இருவழியும்  என்பதும்,  வேற்றுமை யல்வழிச்சாரியை நிலையாது என்பதும்
அதிகாரத்தாற் பெறப்பட்டன.
 

உருபியல் நிலையலாவது: ‘உயர்திணை யாயின் நம்மிடை வருமே’ என்ற
இலக்கணம் பெற்று நிற்றலாம்.