எ.டு :வேற்றுமைக்கண்: எல்லாநங்கையும், செவியும், தலையும், புறமும் எனவரும். கை முதலியவை உயர்திணை உறுப்புக்கள் என்பதனை நம்முச்சாரியை தெளிவுபடுத்தி நின்றது. ஏனைக் கணங்களொடும் ஒட்டிக் கொள்க. | இனி அல்வழிக்கண்: எல்லாக் குறியேமும் எல்லாச் சிறியேமும், எல்லாத் தீயேமும், எல்லாப் பெரியேமும் என வரும். ஏனைக் கணங்களொடும் ஒட்டுக. ‘எல்லாம்’ எனும் பொதுப்பெயர் உயர்திணைக்கண் தன்மையிடத்தல்லது ஏனையிடத்து வாராது என்பது பெயரியலுட் பெறப்படும். | சூ. 325 : | நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே | (30) | |
க-து : | மகர ஈற்று முன்னிலைப் பன்மைப்பெயர் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :சாரியை அல்லாத, நும் என்னும் பெயர் மெல்லெழுத்து மிக்குப் புணரும். | எ. டு:நுங்கை, நுஞ்செவி, நுந்தலை, நும்புறம் எனவரும். ஏனைக் கணங்கள்வரின் மேலானவற்றொடு ஒக்கும். | நும் எனும் பெயர் என்னாது, ஒருபெயர் என்றதன் கருத்தாவது:- மொழிகளின் தோற்றத்திற்கு அடிப்படை, மாந்தரின் உணர்ச்சியாம் என்பது மொழியாய்வாளர் முடிபாகும். தமிழ்மொழிக்கண் மூவிடங்களை உணர்த்திவரும் அடிப்படை எழுத்துக்கள்; உயிருள் அ,இ,உ என்பவையும், ஒற்றுள் த,ஞ,ந என்பவையுமாம். | அவற்றுள் படர்க்கைக்குரியவாக அ, த என்பவையும் முன்னிலைக்குரியவாக உ, ந என்பவையும் தன்மைக்குரியவாக இ, ஞ என்பவையும் அமைந்துள்ளமை காணலாம். | இவற்றினின்றே சுட்டுப் பெயர்களும், கிளைநுதற் பெயர்களும், இடங்காட்டும் விகுதிகளும் அமைந்துள்ளன என்பதை அ, இ, உ, ஆன், ஈன், ஊன், அன், இன், உன் என வருதலான் காணலாம். | அங்ஙனம் தன்மைக்குரியவாக நின்ற இ, ஞ என்பவை ஒலி ஒற்றுமையுடைய எகரமாகவும் யகரமாகவும் திரிந்தமைந்தன. | அம்மரபானே தாம், தம், தான், தன் எனப்படர்க்கையும், ஞேம், ஞெம், (யேம், யெம்) ஏம், எம் (யேன், யென்) ஏன், என் எனத் தன்மையும்; நூம், நும், நூன், நுன், உம், உன் என முன்னிலையும் அமைந்துள்ளமை புலனாகும். |
|
|