எல்லாம் என்றதனான் நாட்டம், ஆட்டம் என்பன உகரம் பெறாது வந்தன என்பார் உரையாசிரியர். அவை நாடு, ஆடு என்னும் குற்றுகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் அம்விகுதி பெற்று நின்றனவாதலின் பொருந்தாதென்க. |
சூ. 328 : | ஈமும் கம்மும் உருமென் கிளவியும் |
| ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன |
(33) |
க-து : | மகர ஈற்றுப் பெயருள் சில உகரம் பெறுமென்கின்றது. |
|
பொருள் : ஈம், கம், உரும் என்னும் சொற்களாகிய அம்மூன்று பெயர்களும் தொழிற் பெயர்களைப் போல இருவழியும் உகரம்பெற்று முடியும். |
எ.டு :ஈமுக்கடிது; கம்முக்கடிது; உருமுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் ஈமுக்கடுமை; கம்முக்கடுமை; உருமுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ஞ ந ம வரின் இயல்பாகும். |
ஒன்றெனமுடித்தல் என்பதனான் தம், நம், நும் என்னும் சாரியைகள் தம்மை உணர்த்தும் வழி உகரம் பெறுதல் கொள்க. |
சூ. 329 : | வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும் |
| தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை |
(34) |
க-து : | மேற்கூறியவற்றுள் இரண்டற்கு வேற்றுமைக்கண் சிறப்புவிதி கூறுகின்றது. |
|
பொருள் : வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் மேல் நின்ற ஈம், கம் என்னும் இரண்டும் அக்கு என்னும் சாரியையொடு தோன்றி வரும். |
எ. டு:ஈமக்குடம்; கம்மக்குடம், சாடி, தூதை, பானை எனவரும். ஏனைக் கணங்களொடும் ஒட்டிக் கொள்க. |
ஏற்புழிக்கோடல் என்பதனான் ஏனையிரண்டும் என்றது ஈமும் கம்மும் எனக் கொள்க. ‘‘மேனை’’ இரண்டும் எனப் பாடம் இருத்தல் வேண்டும் எனக்கருத வேண்டியுளது. மேனை மேல்நின்றவை. அஃதாவது முதற்கண் நின்ற ஈமும் கம்மும் என்பது இப்பாடத்தின் பொருளாம். |