சூ. 339 : | மீன்என் கிளவி வல்லெழுத் துறழ்வே |
(44) |
க - து : | மீன் என்னும் பெயர்க்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : மீன் என்னும் சொல் வல்லெழுத்துவரின் இயல்பும் திரிபுமாக உறழ்ந்து வரும். |
எ. டு: மீன்கண் - மீற்கண்; மீன்செவி - மீற்செவி, தலை, புறம் எனவரும். உடூவின் பெயராகிய விண்மீன் என்பதே முதற் குறையாய் மீன் எனச் சிறுபான்மையாக வழங்கலின் அதற்கு இவ்விதி பொருந்தாதென்க. அது மீன்கணம், மீன்செறிவு, தோற்றம், பொலிவு என இயல்பாயே வரும். |
சூ. 340 : | தேனென் கிளவி வல்லெழுத் தியையின் |
| மேனிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் |
| ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்தே |
| வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை |
(45) |
க - து : | தேன் என்னும் சொல் வல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : தேன் என்னும் சொல், வல்லெழுத்து வந்து புணரின் மேற் கூறியாங்கு உறழ்தலும், மிகுதலும் ஆகிய அம்முறை இரண்டும் உரிமையுடையதாகும். அங்ஙனம் வல்லெழுத்து மிகுங்கால் னகர இறுதி கெடும். |
எ. டு: தேன்குடம் - தேற்குடம் எனவரும். சாடி, தூதை, பானை என ஒட்டிக் கொள்க. தேக்குழம்பு, சிதைவு, தெளிவு, பாளிதம் எனவரும். மிகுதலும் என்னும் உம்மை எதிர் மறை. அதனான் தேன்குழம்பு, தேன்சிதைவு, தேன்துளி, தேன்பாகு என இயல்பாதலே வலியுடைத்தென்க. |
சூ. 341 : | மெல்லெழுத்து மிகினும் மான மில்லை |
(46) |
க - து : | தேன் என்னும் சொற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : தேன் என்னும் சொல் வல்லெழுத்து இயையின் மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிக்குப்புணரினும் குற்றமில்லை. |
எ.டு : தேங்குழம்பு, தேஞ்சாடி, தூதை, பானை எனவரும். னகரக்கேடு அதிகாரத்தாற் கொள்க. |
சூ. 342 : | மெல்லெழுத் தியையின் மிகுதியொடு உறழும் |
(47) |
க-து : | அது மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது. |