பொருள் : மேற்கூறிய னகாரஈற்று இயற்பெயர்கள்முன் மக்கள் முறைதோன்ற நிற்கும் சொற்கள் புணருமிடத்து, அவை மெய்யொழித்து இறுதி கெட்டுநின்ற வழியும், (உம்மையான்) மெய்யொடு இறுதி கெட்டு நின்ற வழியும் அம் என்னும் சாரியை பெற்று நிற்றலும் உரித்தாகும். |
எ. டு: கொற்றங்கொற்றன் - மூலங்கீரனார் - பூதம்புல்லனார், சல்லியங்குமரனார் எனவரும். பூதன் + தத்தனார் என்பது மெய்யொடுங்கெட்டுப் பூதத்தனார் (அகம்-74) எனவும் வரும். |
உம்மையான் கொற்றங்குடி, சாத்தங்குடி எனவருதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். அவை வழூஉவழக்காதலின் ஒவ்வாதென்க. கொற்றமங்கலம், சாத்தமங்கலம் என்பவை உயிரீறாகிய (தொகை-11) என்னும் தொகைமரபுச் சூத்திரத்து ‘‘எல்லா வழியும்’’ என்பதனான் முடியும் என்க. |
சூ. 351 : | தானும் பேனும் கோனும் என்னும் |
| ஆமுறை இயற்பெயர் திரிபிட னிலவே |
(56) |
க-து : | னகார ஈற்றுப் பெயர் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது. |
பொருள் : தான், பேன், கோன் என்னும் ஆகிவரும் முறைமையை உடைய இயற்பெயர்கள் திரிதல் இலவாம். |
எ. டு: தான்றந்தை, கோன்றந்தை எனவும் தான் கொற்றன், பேன் கொற்றன், கோன் கொற்றன் எனவும் வரும். |
தாயன், பேயன், கோவன் என்னும் சொற்களே இடைக் குறையாய்த் தான், பேன், கோன் என வழங்குதல் நோக்கி ‘‘ஆம் முறை இயற்பெயர்’’ என்றார். தான்தந்தை-தான் என்பானின் தந்தை. தான்கொற்றன்-தான் என்பானின் மகனாகிய கொற்றன் எனப்பொருள் கொள்க. ஏனையவும் அன்ன. |
சூ. 352 : | தான்யான் எனும்பெயர் உருபியல் நிலையும் |
(57) |
க-து : | தான்யான் என்பவை திரிந்துபுணரும் என்கின்றது. |
பொருள் : தான் என்னும் படர்க்கைப் பெயரும் யான் என்னும் தன்மைப் பெயரும் உருபுபுணர்ச்சிக்கு ஓதியவாறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் நின்று புணரும். |