எ.டு :முன்ற் + இல் = முன்றில் எனவரும். இல் முன் எனற் பாலது மாறி நின்றுழி முன்னில் என ஏறி முடியாமல் ஒரு றகர ஒற்றுப் பெற்றுமுடிதலின் மரூஉவாயிற்றென்க. |
சூ. 356 : | பொன்னென் கிளவி ஈறுகெட முறையின் |
| முன்னர்த் தோன்றும் லகாரம் மகாரம் |
| செய்யுள் மருங்கின் தொடரிய லான |
(61) |
க-து : | பொன் என்னும் சொல் செய்யுள் வழக்கிற்படுமியல்பு கூறுகின்றது. |
பொருள் : பொன் என்னும் ஈரெழுத்தொரு மொழி, செய்யுள் வழக்கின்கண் தொடர்மொழியாகுமிடத்து, னகர இறுதி கெட அதன் முன்னர் முறையே லகர உயிர்மெய்யும் மகர ஒற்றும் தோன்றும். |
எ. டு:பொன்-பொலம் எனத்தொடர்மொழியாகி வரும். லகர ஒற்றொடு மகரம் மயங்காதாகலின் லகரம் என்றது உயிர் மெய்யை என்பது பெறப்படும். |
பொலம் என நின்ற வழி அவ்ஈறு அம்முச்சாரியையின் இயல்பிற்றாகலின் வல்லெழுத்துவரின் மகரம் கிளை ஒற்றாகத் திரியும் என்க. இஃது உய்த்துணர்தலின் பாற்படும். |
எ. டு: பொலங்கலஞ் சுமந்த (அகம்-16) பொலஞ்சுட ராழியின், பொலந்தார்க் குட்டுவன் (புறம்-343) பொலம்படை (மலைபடு-574) எனவரும். மெல்லெழுத்துவரின் பொலநறுந்தெரியல், பொலமலர் எனக் கெடுமென்க. |
‘‘தொடரியலான’’ என்றது தொடர்மொழி இயல்பினதாக ஆதற்கண் என்றவாறு. இதுவும் மரீஇய மரபு என்பதுணர இதனை ‘முன்னென்கிளவி’ என்பதன் பின்வைத்தார் என்க. |
சூ. 357 : | யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் |
| வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே |
(62) |
க.து : | யகர ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி யாமாறு கூறுகின்றது. |
பொருள்: யகர ஈற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து வந்து இயையின் அவ்வல்லெழுத்து மிக்குப் புணரும். |
எ. டு:நாய்க்கால்; பேய்க்கால், செவி, தலை, புறம் எனவரும். |