எ. டு:கல் + தீது = கஃறீது, அஃறிணை எனவரும். |
வருமொழித்திரிபு தொகைமரபினுட் பெறப்படும் (தொகை-8) பஃறாழிசை, பஃறொடை என விதியீறாகி நின்ற லகரத்திற்கும் இவ்விதி ஒக்கும். ஏற்புழிக் கோடல் என்பதனான் இத்திரிபு குறில் வழிநின்ற லகரத்திற்கேயாகும் என அறிக. |
சூ. 370 : | நெடியதன் இறுதி இயல்புமா ருளவே |
(75) |
க-து : | ஒருசார் லகர ஈற்றுச் சொற்கள் இயல்பாகும் என்கின்றது. |
பொருள் : நெட்டெழுத்தின் பின்நின்ற லகர இறுதிச் சொற்கள் திரிபின்றி இயல்பாதலும் உளவாம். |
எ. டு: கால்குறிது, பால்சிறிது, நூல்பெரிது எனவும் புலால் கொடிது, வரால் பெரிது எனவும் வரும். தகரம் வருவழி, வராறீது, வேறீது என லகரம் கெடுதல் தொகைமரபினுள் (தொகை-78) பெறப்படும். உம்மையான் திரிந்து வருவன உளவேல் கண்டு கொள்க. மேற்கோள், மேற்பார்வை எனக் காட்டலுமாம். |
சூ. 371 : | நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் |
| அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல |
(76) |
க-து : | ஒருசார் லகர ஈற்றுப் பெயர்கள் அல்வழியினும் திரியுமென்கின்றது. |
பொருள் : நெல், செல், கொல், சொல் என்னும் நான்கு பெயர்களும், அல்வழியாற், சொல்லுமிடத்தும் வேற்றுமைக்கு ஓதிய இயல்பினவாய் லகரம் றகரமாகத் திரியும். |
எ. டு: நெற்குவிந்தது - செற்கிளர்ந்தது; கொற்கடிது - சொற்கடிது, சிறிது, தீது, பெரிது என ஒட்டிக் கொள்க. (செல் - மேகம்; கொல்-கொல்லத்தொழில்; சொல்-மொழி, நெல்) |
சூ. 372 : | இல்லென் கிளவி இன்மை செப்பின் |
| வல்லெழுத்து மிகுதலும் ஐஇடை வருதலும் |
| இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும் |
| கொளத்தகு மரபின் ஆகிடன் உடைத்தே |
(77) |
க-து : | இல் என்னும் பண்புரிச் சொற்காவதோர் மரபுணர்த்துகின்றது. |
பொருள்:இல் என்னும் குறையுரிச்சொல், வினைக்குறிப்புப் பொருளை உணர்த்தாமல் இன்மைப் பண்பை உணர்த்தி நிற்றற்கண், வல்லெழுத்துவரின் மிகுதலும் ஐகாரச் சாரியை இடையே |