சிறுமை, தீமை, பெருமை எனவும் வல்லுஞாற்சி, நீட்சி, மாட்சி எனவும் இருவழியும் வரும். |
சூ. 374 : | நாயும் பலகையும் வரூஉங் காலை |
| ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே |
| உகரங் கெடுவழி அகரம் நிலையும் |
(79) |
க-து : | வல்லென்னும் சொற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய வல்லென்னும் சொன்முன்னர் நாய், பலகை என்னும் சொற்கள் வந்துபுணரின், அவ்விடத்து மேற்கூறிய உகரங் கெடுதலும் உரித்தாகும். உகரம் கெடுமிடத்து ஆண்டு அகரம் வந்து நிலைபெறும். |
எ. டு: வல்லநாய், வல்லப்பலகை எனவரும். உம்மையான் வல்லுநாய், வல்லுப் பலகை எனவும் வரும். நாய் என்பது சூதுஆடும் கருவியாகிய காய்களை. இவை வல்லினுள் நாய் எனவும் வல்லுக்குரிய பலகை எனவும் விரியும். |
சூ. 375 : | பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு |
| ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே |
(80) |
க-து : | சில லகரஈற்றுப்பெயர் அம்முச்சாரியை பெறுமென்கின்றது. |
பொருள்: பூல், வேல், ஆல் என்னும் அம்மூன்று பெயர்கட்கும் அம்முச்சாரியை இடையே வரும். |
எ. டு: பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு - செதிள், தோல், பூ எனவரும். இவை மூன்றும் மரப்பெயர். |
வருமொழி வரையாமையான் பூலஞெரி, வேலஞெரி, ஆலஞெரி-நிழல், முறி, விறகு என ஏனைக்கணத்தும் அம்முப் பெறுதல் கொள்க. பூலாங்கோடு, பூலாங்கழி என ஆம்சாரியையும் வருமென்பார் உரையாளர். அஃது வழூஉவழக்காகலின் ஏலாது. சான்றோர் வழக்காயின் வழுவமைதியாகப் புறனடைப் பாற்படுத்துக் கொள்க. |
சூ. 376 : | தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல |
(81) |
க-து : | லகர ஈற்றுத் தொழிற் பெயர்கட்குரிய விதி கூறுகின்றது. |
பொருள் : லகார ஈற்றுத் தொழிற்பெயர் எல்லாம் ஞகார ஈற்றுத் தொழிற் பெயரியல்பினவாம். அஃதாவது உகரம் பெற்று வல்லெழுத்து மிகுதலும், ஞநம வரின் இயல்பாதலுமாம். |