முற்படக் கிளந்த என்றதனான் வற்றொடு இன்சாரியையும் ஒருங்கு பெற்று அவற்றின் கோடு, இவற்றின் கோடு, உவற்றின் கோடு என வருதலும் கொள்க. |
சூ. 379 : | வேற்றுமை அல்வழி ஆய்த மாகும் |
(84) |
க-து: | சுட்டுப் பெயரின் வகரம் அல்வழியாற் புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : சுட்டுப் பெயரின் வகர ஈறு அல்வழிக்கண் வல்லெழுத்தொடு புணருமிடத்து வகரந்திரிந்து ஆய்தப் புள்ளியாய் நிற்கும். |
எ. டு: அஃகடிய, இஃகடிய, உஃகடிய- சிறிய, தீய, பெரிய எனவரும். புணர்மொழி ஆய்தம் என்பது தவறான கொள்கை என்பது இதனானும் விளங்கும். |
சூ. 380 : | மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும் |
(85) |
க-து : | சுட்டுவகரஈறு மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : வகர ஈற்றுச் சுட்டுப் பெயர் மெல்லெழுத்தொடு இயையின் வந்த மெல்லெழுத்தாகத் திரியும். |
எ. டு: அஞ்ஞாண்கள், அந்நூல்கள், அம்மலர்கள் என வரும். நிலைமொழி, பன்மைச் சொல் என்பது விளங்க வருமொழி ஈற்றின்கண் கள்விகுதி கூட்டிக்கூறுதல் தகவுடைத்தென்க. என்னை? அ, இ, உ என்னும் சுட்டுக்களொடு மெல்லெழுத்துப் புணரினும் அவையும் அந்நூல் என்றே வருமாதலின் என்க. |
சூ. 381 : | ஏனவை புணரின் இயல்பென மொழிப |
(86) |
க-து : | சுட்டு வகர ஈறு இடைக்கணத்தொடும் உயிர்க்கணத்தொடும் புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : வகர ஈற்றுச் சுட்டுப் பெயர்கள் வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் அல்லாத ஏனைய இடைக்கணத்தொடும் உயிர்க் கணத்தொடும் புணரின் திரிபின்றி இயல்பாகும் என்று கூறுவர் புலவர். |
எ. டு: அவ்யாழ்கள், இவ்யாழ்கள், உவ்யாழ்கள், அவ்வட்டுக்கள், அவ்வணிகள் எனவரும். ஏனையவற்றொடும் ஒட்டிக் கொள்க. |
சூ. 382 : | ஏனை வகரம் தொழிற்பெய ரியற்றே |
(87) |
க-து : | ‘தெவ்’ என்னும் வகர ஈறு புணருமாறு கூறுகின்றது. |