புள்ளிமெய்களையும், ஆய்தஎழுத்தினையும் வெளிப்படுத்தும். இம் மூவகை ஓசைகளுள், இசையும் ஒலியும் கலந்தும் வரும், அஃகோசை தனித்தே வரும். செவிப்புலனாகும் இவ்வெழுத்துக்கள் யாவும் கண்டத்தினின்று வெளிப்பட்டு மெய்ப்பாட்டுநிலையாற் புலனாகும். |
தமிழ்மொழிக்குரிய முப்பத்துமூன்று எழுத்துக்களும், வெளிப்படுங்கால், தலையும் மிடறும் நெஞ்சும் வளிஊன்றுமிடமாக அமைந்து, நெஞ்சுவளியிசையானும் மிடற்றுவளியிசையானும் மூக்கு வளியிசையானும் உருப்பெற்று வரும். |
இவ்வளியிசையை வடிவுசெய்து உருப்படுத்தும் உறுப்புக்கள் மிடற்றுக்குழல், மிடற்றுக்கு மேலுள்ள மூக்குக்குழல், அண்ணம், அண்பல், நா, இதழ் ஆகியவையாம் (பிறப்பியல்-1). |
உந்திமுதலாக எழும் வளியிசை தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்றிடங்களில் உணர்வழுத்தம் பெற்று யாவும் கண்டத்தினின்று வெளிப்படும். அங்ஙனம் வெளிப்படுங்கால், நாவும் இதழும் தடைசெய்யாது நிற்பின், அவ்வோசை உயிர்ப்பிசையாய் உயிரெழுத்துக்களைப் பிறப்பிக்கும்; நாவும் இதழும் பல்லும் அண்ணமும் செயற்பட்டுத் தடைசெய்து வெளிப்படுத்தின் அவ்வொலிகள் மெய்யெழுத்துக்களைப் பிறப்பிக்கும். |
உயிரெழுத்து:- வாயுறுப்புக்களின் செயற்பாடின்றி அவை சமநிலையில் நிற்க, வாய் அங்காப்ப, மிடற்றெழுவளியிசையான் வெளிப்படும் உயிர்ப்பிசையே அகரமென்னும் அடிப்படையெழுத்தாகும். இவ்வகரம் எல்லா எழுத்துக்கட்கும் மூலமாகவும் துணையாகவும் அகநிலையிற் செயற்படும். அஃதாவது, அகரவொலியின் திரிபுகளே பல்வேறு எழுத்தாகச் செவிப்புலனாகும். |
அகரமாகிய எழுத்தே, வாய்இதழ்களின் கோணத்தானும் நாவிளிம்பின் விரிவானும் சுருக்கத்தானும் ஏனைப் பதினொரு வகையாகிப் பன்னிரண்டு உயிரெழுத்தாகத் திகழ்கின்றது. |
உயிர்மெய் :- அங்ஙனம் பன்னிரண்டுகோணங்களில் வெளிவரும் உயிர்ப்பிசையினை, நாவானது அண்பல்லோடும் அண்ணத்தொடும் உற்றும் உறழ்ந்தும், இதழானது பல்லொடும் இதழொடும் இயைந்தும், தடைப்படுத்தி வெளிப்படுத்தும் நிலைமையான் வருவன உயிர்மெய்யெழுத்துக்களாகும். |
மெய் :- நா முதலிய உறுப்புக்கள் செயற்படும் நிலைகளுள் பதினொருநிலைகளை வரையறைசெய்து அவற்றான் வடிவு கொள்ளும் நிலையைத் தமிழ் நூலார் மெய்யென அமைத்துக் |