இன்னும்   இக்குறிப்புக்ளை  அச்சிட்டு  வெளிப்படுத்துமாறு  பலமுறை
ஊக்கப்படுத்தியவர்களும்,   அச்சிட்டபின்   இக்குறிப்புக்களைப்   படித்துப்
பார்த்துச்     சில     திருத்தங்     கூறி    யுதவியவரும்,   சுன்னாகம்,
அ. குமாரசுவாமிப்   புலவரவர்களுக்கு   மாணாக்கரும்,   பண்டிதருமாகிய
'வித்தக'ப் பத்திராதிபர், ச. கந்தையபிள்ளை அவர்களுக்கும் எமது பேரன்பு
உரியதாகுக.
 

இவ்    விளக்கவுரைக்   குறிப்புக்களைப்   பிழைகள்   வாராவண்ணம்
அச்சிடுதற்கு   ஏற்றவாறு   நன்கிதாக   எழுதியும்,   உதாரண  அகராதி,
அரும்பதவிளக்கம்  முதலியன  என்னுமிவற்றை  எழுதியும்  உதவிய எமது
மாணவர்  சிறுப்பிட்டி,  தி. சுப்பிர  மணியபிள்ளைக்கும்   எமது   அன்பு
உரியதாகுக.
 

இன்னும்,   தாமோதரம்பிள்ளை   அவர்களது  வரலாற்றுச் சுருக்கத்தை
எழுதி  உதவிய  முதலியார் ஸ்ரீமாந் குல. சபாநாதன் அவர்களுக்கும் எமது
நன்றி யுரியதாகுக.
 

இன்னும்,     நூலாசிரியர்    வரலாறு,    உரையாசிரியர்    வரலாறு
என்பவற்றையும்,  மேற்கோள்  விளக்கம்  ஆகியவற்றையும் எழுதி உதவிய
மற்றும் மாணவர்களுக்கும் எமது அன்பு உரியதாகுக.
 

இன்னும்,  சுதம்பமுள  நியாயம்,  வீசிதரங்க  நியாயம்  என்பவைகளை,
தருக்கசங்கிரகத்தின்   உரைக்குரையாகிய  நீல  கண்டீயத்தின்  உரைகளை
நோக்கி,     விளக்கமுற    எழுதி    உதவிய    சுன்னாகம்    பிராசீன
பாடசாலைச்   சம்ஸ்கிருத   வாசிரியரும்,   சம்ஸ்கிருத  வித்துவானுமாகிய
பிரமஸ்ரீ    வி. சிதம்பரசாஸ்திரி    யவர்களுக்கும்    எமது    வணக்கம்
உரியதாகுக.
 

இன்னும்    இக்குறிப்புக்களை   யச்சிட்டு   வெளிப்படுத்திய   இந்நூற்
பதிப்பாசிரியருக்கும் எமது பேரன்பு உரியதாகுக.
 

புன்னாலைக்கட்டுவன்,
தாது-தை-1.

சி. கணேசையர்,