மொழிமரபு83

புகர்   புகழ்    என்பனவற்றை    நெட்டெழுத்தென்றே    எவ்விடத்தும்
ஆளாமையானும்   நெட்டெழுத்தாகக்  கூறிய  இலக்கணத்தால் ஒரு பயன்
கொள்ளாமையானுஞ்   செய்யுளியலுள்  இவற்றைக்  குறிலிணை  ஒற்றடுத்த
நிரையசையாகவுந்   தார்தாழ்   என்பனவற்றை  நெட்டெழுத்து  ஒற்றடுத்த
நேரசையாகவுங் கோடலானும் அது பொருளன்மை உணர்க.
 

(17)
 

51.

செய்யு ளிறுதிப் 1போலி மொழிவயி
னகார மகார மீரொற் றாகும்.
 

இது செய்யுட்கண் ஈரொற்றிலக்கணமாமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : 2செய்யுட் போலி மொழி இறுதிவயின் - செய்யுட்கட்
போலுமென்னுஞ் சொல்லின் இறுதிக்கண், னகாரம் மகாரம் ஈரொற்றாகும் -
னகாரமும் மகாரமும் வந்து ஈரொற்று உடனிலையாய் நிற்கும் என்றவாறு.
 

உதாரணம் : 'அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்' 'சிதையுங்
கலத்தைப்  பயினாற்  றிருத்தித் - திசையறி  மீகானும் போன்ம்' (பரி - 10)
எனவரும். போலும்  என்னுஞ்  செய்யுமென்னும்  முற்று  ஈற்றுமிசையுகரம்
மெய்யொழித்துக்  கெட்டு  லகாரந் திரிந்துநின்றது. இஃது இறுதியில் முற்று.
இடையிற் பெயரெச்சமாகிய உவமவுருபு. ஈண்டு முற்றென்பார் 3இறுதிமொழி
என்றார்.
 

(18)

இரண்டு  மாத்திரையையுடைய  நெட்டெழுத்துக்குக்  கீழ்  நின்றன  போல
ஈண்டுக்   கொள்ளப்படு  மியல்பை.  இக்  கருத்தை  ஓராது  புகர்  புகர்
என்பவற்றை  நெட்டெழுத்து  மொழியாக உரையாசிரியர் கொண்டாரென்று
நச்சினார்க்கினியர் மறுத்தல் பொருந்தா தென்க.
 

1. போலும் மொழிவயின் என்றும் பாடம்.
 

2. செய்யு ளிறுதிக்கண் போலும் என்னுஞ் சொல்லிக்கண்
என்றிருப்பது நலம்.
 

3. பெயரெச்சம்  பெயர்கொண்டன்றி நில்லாதாதலின் இறுதிச் சொல்லாய்
நில்லாது; முற்றே இறுதிச் சொல்லாய் நிற்கும் என்பது கருத்து.