மொழிமரபு87

உதாரணம் : ஐவனம்  அய்வனம்  எனவரும். மெய்பெற என்றதனான்
அகரத்தின்பின்னர்   உகரமேயன்றி   வகரப்   புள்ளியம் ஒளகாரம்போல
வருமென்று கொள்க. ஒளவை அவ்வை எனவரும்.
 

(23)
 

57.

ஓரள பாகு மிடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான.
 

இஃது   அதிகாரத்தான்   ஐகாரத்திற்கும்   ஒளகாரத்திற்கும்   எதிரது
போற்றலென்பதனாற்    செய்யுளியலைநோக்கி    மாத்திரைச்    சுருக்கங்
கூறுகின்றது.
 

இதன் பொருள் : மொழிவயினான - ஒரு சொல்லிடத்தே நின்ற ஐகார
ஒளகாரங்கள்,     தேருங்காலை     -    ஆராயுமிடத்து,    ஓரளபாகும்
இடனுமாருண்டே - ஒரு மாத்திரையாய்நிற்கும் இடமும் உண்டு என்றவாறு.
 

உம்மையான்    இரண்டுமாத்திரை   பெறுதலே    வலியுடைத்தாயிற்று.
இடனுமென்றது  ஒருசொல்லின் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துக்குங்
குறுகும், அது   செய்யுட்கண்  ஓசை  இடர்ப்பட்டொலிக்குமிடத்துக் குறுகு
மென்றற்கு.   உரையிற்   கோடல்   என்பதானல்  ஐகாரம் முதலிடைகடை
யென்னும்   மூன்றிடத்துங்   குறுகும்,   ஒளகாரம் முதற்கண் குறுகுமெனக்
கொள்க.
 

உதாரணம் : ஐப்பசி   கைப்பை   இடையன்   குவளை   எனவரும்.
'அடைப்பையாய்கோறா' எனவும், 'புனையிளங்கொங்கையாய்வரும்' எனவும்
பிறவாறும்  வருவன  செய்யுளியலுட் காண்க. ஒளவை கௌவை எனவரும்.
ஒளகாரம்  'கௌவை    நீர்வேலி   கூற்று'  (வெண்பா  -  23)   எனத்
தொடைநோக்கிக் குறுகினவாறுங் காண்க: தேருங்காலை யென்றதனான்
ஓரெழுத் தொருமொழியுங் குறுகும். கை பை எனவரும்.
  

(24)
 

58.

இகர யகர மிறுதி விரவும்.
 

இதுவும் போலி கூறுகின்றது.