100பிறப்பியல்

3. பிறப்பியல்
 

83.

உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கு
மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா
னுறுப்புற் றமைய நெறிப்பட நாடி
யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான.
 
என்பது  சூத்திரம். இவ்வோத்து  எழுத்துக்களினது பிறப்பு உணர்த்துதலிற்
பிறப்பியலென்னும்  பெயர்த்தாயிற்று.    சார்பிற்   றோற்றத்து   எழுத்துந்
தனிமெய்யும்  மொழியினன்றி   உணர்த்தலாகாமையின்  அவை  பிறக்கும்
மொழியை மொழி மரபிடை  உணர்த்திப் பிறப்பு  உணர்த்த வேண்டுதலின்
நூன்மரபின் பின்னர் வையாது இதனை மொழிமரபின் பின்னர் வைத்தார்.
 

இச் சூத்திரம் எழுத்துக்களினது பொதுப்பிறவி இத்துணை நிலைக்களத்து
நின்று புலப்படுமென்கின்றது.
 

இதன் பொருள். எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லுங்காலை
- தமிழெழுத்து   எல்லாவற்றிற்கும்    ஆசிரியன்    கூறிய   பிறப்பினது
தோற்றரவை யாங் கூறுமிடத்து,  உந்தி  முதலாத்  தோன்றி  முந்து வளி -
கொப்பூழடியாகத்  தோன்றி    முந்துகின்ற    உதானனென்னுங்   காற்று,
தலையினும்  மிடற்றினும்   நெஞ்சினும்    நிலைஇ -   தலையின்கண்ணும்
மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்று, பல்லும் இதழும் நாவும்
மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று - பல்லும்
இதழும் நாவும் மூக்கும்  அண்ணமுமென்ற  ஐந்துடனே  அக்காற்று, நின்று
தலையும்  மிடறும்    நெஞ்சுங்   கூட   எட்டாகிய  முறைமையையுடைய
தன்மையோடு  கூடிய  உறுப்புக்களோடு  ஒன்றுற்று,  அமைய - இங்ஙனம்
அமைதலானே, வேறுவேறு   இயல - அவ்   வெழுத்துக்களது  தோற்றரவு
வேறுவேறு புலப்பட வழங்குதலையுடைய, காட்சி