பிறப்பியல்101

யான நாடி நெறிப்பட - அதனை   அறிவான்    ஆராய்ந்து   அவற்றின்
வழியிலே     மனம்பட,       திறப்படத்     தெரியும் - அப்   பிறப்பு
வேறுபாடுகளெல்லாங் கூறுபட விளங்கும் என்றவாறு.
 

1சொல்லுங்காலை  வளி   நிலைபெற்று   உறுப்புக்களுற்று   இங்ஙனம்
அமைதலானே அவை வழங்குதலையுடைய; அவற்றின் வழக்கம்  அவற்றின்
வழியிலே  மனந்   திறப்படத்  தெரியுமெனக்  கூட்டி  உரைத்துக்கொள்க.
இ்ங்ஙனம் கூறவே 2முயற்சியும் முயலுங் கருத்தாவும் உண்மைபெற்றாம்.
  

(1)
 

84.

அவ்வழி
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்.
 

இஃது உயிரெழுத்திற்குப் பொதுப்பிறவி கூறுகின்றது.
 

இதன் பொருள்: பன்னீருயிருந்   தந்நிலை   திரியா  -  பன்னிரண்டு
உயிருந்  தத்தம்   மாத்திரை   திரியாவாய்,  அவ்வழிப்  பிறந்த -  அவ்
வுந்தியிடத்துப்  பிறந்த,   மிடற்றுவளியின்   இசைக்கும்  -  மிடற்றின்கண்
நிலைபெற்ற காற்றான் ஒலிக்கும் என்றவாறு.
 

எனவே      குற்றியலிகரமுங்         குற்றியலுகரமுந்     தந்நிலை
திரியுமென்றாராயிற்று. அவ் வெழுத்துக்களைக் கூறி உணர்க.

 

(2)
 

85.

அவற்றுள்
அ ஆ ஆயிரண் டங்காந் தியலும்.

 

இஃது அவ்வுயிர்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி கூறுகின்றது.
 

இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய பன்னிரண்டு உயிர்களுள், அ
ஆ ஆயிரண்டு - அகர ஆகாரங்களாகிய


1. சொல்லுங்காலை    என்பதை    எழுத்துக்களைக்   கூறுபவனுடைய
வினையாக்கி உரையாசிரியர் கூறுவர். அதுவே சிறந்த உரையாதல் காண்க.
 

2. வளிதோன்றி நிலைபெற்று   உறுப்புற்று   அமைய   என்றதனானே
அங்ஙனம்   அமைதற்கு     உயிர்க்கிழவனது     முயற்சியும்   அவனும்
வேண்டுமென்பது பெறப்படும். உயிர்க்கிழவன் - கருத்தா.