106பிறப்பியல்

வண்ணத்தை  அந்  நாத்  தடவ ளகாரமாயும்,  இரண்டும் பிறக்கும் - இவ்
விரண்டெழுத்தும் பிறக்கும் என்றவாறு.
 

ல ள என இவற்றின் வேறுபாடு உணர்க.
 

1இத்துணையும் நாவதிகாரங் கூறிற்று.
 

(14)
 

97.

இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : இதழ்   இயைந்து   பிறக்கும்   பகார   மகாரம் -
மேலிதழுங் கீழி தழுந்  தம்மிற்  கூடப்  பகாரமும்   மகாரமும்  பிறக்கும்
என்றவாறு.
 

ப ம என இவற்றின் வேறுபாடு உணர்க.
 

(15)
 

98.

பல்லித ழியைய வகாரம் பிறக்கும்.
 

இது வகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்: பல்  இதழ்   இயைய   வகாரம்   பிறக்கும் - மேற்
பல்லுங் கீழி தழுங் கூட வகாரமானது பிறக்கும் என்றவாறு.
 

'வ என வரும். இதற்கு இதழ் இயைதலின் மகரத்தின் பின்னர்
வைத்தார்.
 

(16)
 

99.

அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்.

 

இது யகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்: எழுவளி மிடற்றுச்  சேர்ந்த இசை - உந்தியிலெழுந்த
காற்று  மிடற்றிடத்துச்  சேர்ந்த   அதனாற்   பிறந்த   ஓசை,  அண்ணங்
கண்ணுற்று அடைய - அண்


1. இத்துணையும்  நாவதிகாரம்  கூறிற்றென்றது,  அ - ம்  சூத்திரத்தில்
நாவிற் பிறக்கும் எழுத்தை அதிகாரப்பட  வைத்து  அது  முதலாக  நாவிற்
பிறக்கும்  எழுத்துக்களையே   கூறிவந்தமையை.   அதிகாரம் - தலைமை,
முறைமை என்பர் நச்சினார்க்கினியர்.