அல்வழியாவன அவ்வுருபுகள் தொக்கும் விரிந்தும் நில்லாது புணர்வன. அவை எழுவாய் வேற்றுமை 2ஆறு பயனிலையோடும் புணர்ந்த புணர்ச்சியும், விளிவேற்றுமை தன்பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும், முற்றுப்பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், பெயரெச்சமும் வினை |
2. ஆறு பயனிலை என்றது, 'பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் - வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் - பண்பு கொள வருதல் பெயர்கொள வருதலென் - றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே' என்னுஞ் சொல்லதிகாரச் சூத்திரத்தாற் கூறிய ஆறு பயனிலையையும். அவற்றிற்கு உதாரணம் முறையே ஆவுண்டு, ஆவாழ்க, ஆவந்தது, ஆயாது, ஆகரிது, ஆபல என்பனவாம். பண்புத்தொகை விரிவுழி ஐம்பாலீறாக விரியும். வினைத்தொகை விரிவுழிச் செய்த செய்யும் என்னும் பெயரெச்ச வீறாக விரியும். இத் தொகைகள் பிரித்துப் புணர்க்கப்படா ஒரு சொல்லாய் நிற்கும். இங்ஙனம் பிரித்துப் புணர்க்கப்படாவென ஆசிரியர் கூறுவதைப் பலவிடத்துங் கூறுகின்ற நச்சினார்க்கினியர் ஈண்டுப் பண்புத்தொகையும் வினைத்தொகையும் விரிந்துநின்றவழிப் புணர்ந்த புணர்ச்சியுமெனக் கூறியது பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. |