புணரியல்129

இனி முன்னரென்றதனானே  1மாவிற்கும்  இவ்வாறே  கொள்க. மானை
மாவினை  மானொடு  மாவினொடு  மாற்கு  மாவிற்கு என ஒட்டுக. ஆகார
ஈறென்னாது   ஆவினிறுதியென்று    ஓதினமையின்    மா   இலேசினாற்
கொள்ளப்பட்டது.
 

இனி  ஆன்கோடு  ஆவின்கோடு   மான்கோடு   மாவின்கோடு  என
உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழியுங் கொள்க.
 

121.

அளவாகு மொழிமுத னிலைஇய வுயிர்மிசை
னஃகான் றஃகா னாகிய நிலைத்தே.
 

இஃது அவ்வின்சாரியை ஈறுதிரியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்:   அளவாகும்    மொழி   -   அளவுப்பெயராய்ப்
பின்னிற்கும்   மொழிக்கு,   முதல்   நிலைஇய   உயிர்மிசை  னஃகான் -
முன்னர்நின்ற எண்ணுப்பெயர்களின் ஈற்றுநின்ற  குற்றுகரத்தின் மேல் வந்த
இன்சாரியையது  னகரம்,  றஃகானாகிய  நிலைத்து  -  றகரமாய்த்  திரியும்
நிலைமையையுடைத்து என்றவாறு.
 

உதாரணம் : பதிற்றகல்  பதிற்றுழக்கு.  இவற்றைப்  பத்தென  நிறுத்தி
'நிறையு  மளவும்'  (எழு - 436)   என்னுஞ்   சூத்திரத்தால்  இன்சாரியை
கொடுத்துக்   'குற்றிய   லுகர  மெய்யொடுங்   கெடுமே'    (எழு - 433)
என்றதனாற் குற்றுகரம் மெய்யோடுங்  கெடுத்து  2வேண்டுஞ்செய்கைசெய்து
'முற்றவின் வரூஉம்' (எழு - 433) என்பதனான் ஒற்றிரட்டித்து. முடிக்க.
 

நிலைஇய   என்றதனாற்   3பிறவழியும்  இன்னின்  னகரம்  றகரமாதல்
கொள்க.  பதிற்றெழுத்து   பதிற்றடுக்கு   ஒன்பதிற்றெழுத்து  பதிற்றொன்று
பதிற்றிரண்டு பதிற்றொன்பது என


1. ஆகாரவீறாயின்  மாவுங் கொள்ளப்படும். இங்கே ஆவினிறுதி என்று
ஆவையே கூறினமையின் மாஇலேசினாற் கொள்ளப்பட்டது. இதனை ஒப்பக்
கூறல் என்னும் உத்தியால்  ஆவும்  மாவும்  என்பர்  பேராசிரியர்.  ஆன்
என்பதில் னகரம் சாரியை யென்பர் நன்னூலார்.
 

2. வேண்டும்  செய்கை  என்றது,  மெய்யில்   உயிரேற்றி  முடிப்பதை.
பதிற்றகல் என்பதில் இற்ற சாரியையென்பர் நன்னூலர்.
 

3. பிறவழி - அளவாகு மொழிமுதலல்லாத வழி.