எல்லாவற்றோடும் ஒட்டிக்கொள்க. அச் சூத்திரத்திற் 'குறையா தாகும்' (எழு - 436) என்றதனாற் பொருட் பெயர்க்கும் எண்ணுப்பெயர்க்கும் இன் கொடுக்க. |
(19) |
122. | வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்மு னஃகா னிற்ற லாகிய பண்பே. |
|
இது வற்றுமுதல் திரியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: சுட்டுமுதல் ஐம்முன் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுச்சொன்முன் வற்று வருங்காலை, வஃகான் மெய்கெட அஃகான் நிற்றலாகிய பண்பு - அவ்வற்றுச் சாரியையினது வகரமாகிய ஒற்றுக் கெட ஆண்டு ஏறிய அகரம் நிற்றல் அதற்கு உள தாகிய குணம் என்றவாறு. |
உதாரணம் : அவையற்றை இவையற்றை உவையற்றை எனவரும். இன்னும் இவற்றை, அவை இவை உவை என நிறுத்திச் 'சுட்டுமுத லாகிய வையெ னிறுதி' (எழு - 177) என்றதனான் வற்றும் உருபுங் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்க. இவ்வாறே எல்லா உருபிற்கும் ஒட்டுக. அவையற்றுக்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்ற வழியுங் கொள்க. |
ஆகியபண்பு என்றதனானே 1எவனென்பது படுத்தலோசையாற் பெயராயவழி எவன் என நிறுத்தி வற்றும் உருபுங் கொடுத்து வற்றுமிசையொற்றென்று னகரங்கெடுத்து அகரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து எவற்றை எவற்றொடு என முடிக்க. |
(20) |
123. | னஃகான் றஃகா னான்க னுருபிற்கு. |
|
இஃது இன் ஒன் ஆன் அன்னென்னும் னகர ஈறு நான்குந் திரியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: னஃகான் நான்கனுருபிற்கு றஃகான் - னகார ஈற்று நான்கு சாரியையின் னகரமும் நான்காமுருபிற்கு றகாரமாய்த் திரியும் என்றவாறு. |
|
1. எவன் என்பது எடுத்தலோசையாற் கூறின் வினாவினைக் குறிப்பாகும். படுத்தலோசையாற்கூறின் வினாப்பெயராம் என்றபடி. வற்றுச்சாரியையை அற்றுச்சாரியையென்பர் நன்னூலார். |