128. | எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி 1யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத் தோன்றாது. |
|
இஃது அக்கு முதல் ஒழிய ஏனைய கெடுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: எப்பெயர் முன்னரும் - எவ்வகைப்பட்ட பெயர்ச்சொன் முன்னரும், வல்லெழுத்து வருவழி - வல்லெழுத்து வருமொழியாய் வருமிடத்து, அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்றத்தோன்றாது - இடை நின்ற அக்குச் சாரியையின் இறுதி நின்ற குற்றியலுகரம் முடியத் தோன்றாது, மெய்ம்மிசையொடுங்கெடும் - அக்குற்றுகரம் ஏறி நின்ற வல்லொற்றுத் தனக்கு மேல்நின்ற வல்லொற்றோடுங் கெடும் என்றவாறு. |
'ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம்' (எழு - 418) என்றதனான் அக்குப்பெற்ற 2குன்றக்கூகை மன்றப்பெண்ணை என்பனவும், 'வேற்றுமை யாயி னேனை யிரண்டும்' (எழு - 329) என்பதனான் அக்குப்பெற்ற ஈமக்குடம் கம்மக்குடம் என்பனவும், 'தமிழென் கிளவியும்' (எழு - 385) என்பதனான் அக்குப்பெற்ற தமிழக்கூத்து என்பதுவும் அக்கு ஈறு கெட்டவாறு காண்க. இங்ஙனம் வருதலின் எப்பெயரென்றார். முற்றவென்பதனான் வன்கணமன்றி ஏனையவற்றிற்கும் இவ்விதி கொள்க. தமிழநூல் தமிழயாழ் தமிழவரையர் என |
|
1. அக்கினிறுதி மெய்ம்மிசையொடும் என்பதற்கு இறுதி மெய் (உகரம் ஏறிநின்ற மெய்) தன்மேலுள்ள ககரவொற்றோடும் கெடும் என்று பொருள்கொள்ளல் சிறப்பாம். இதற்கு மெய் எழுவாயாய் நிற்றலின் மெய்மிசையொடுங்கெடும் என்று பாடமிருத்தல் வேண்டும். ககரவொற்றிலேறி நின்ற குற்றியலுகரமும் கெடும் என்றவாறு. |
2. குன்றக்கூகை என்புழி, அக்குமெய்ம்மிசையொடுங் கெடாது, அக்கிலுள்ள ககரவொற்று நிற்குமென்றால் என்னையெனின்? அங்ஙனங் கொள்ளின் கசதப முதன்மொழி வருங்கால் ககரத்துக் கன்றி ஏனையவற்றிற்குப் பொருந்தாமையின் வல்லினம் மிகுமென்றலே பொருத்தமாமென்க. |