136புணரியல்

132.

1பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந்
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணு
மொட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச்
சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா
திடைநின் றியலுஞ் சாரியை யியற்கை
யுடைமையு மின்மையு மொடுவயி னொக்கும். 
 

இது    முற்கூறிய      சாரியைகளெல்லாம்      புணர்மொழியுள்ளே
வருமென்பதூஉம்  அம்மொழி  தாம்  இவையென்பதூஉம்    அவைவராத
மொழிகளும் உளவென்பதூஉங் கூறுகின்றது.
 

இதன் பொருள்:    பெயருந்    தொழிலும்   -   பெயர்ச்சொல்லுந்
தொழிற்சொல்லும்,   பிரிந்து   இசைப்ப  ஒருங்கு  இசைப்ப  -  பெயருந்
தொழிலுமாய்ப்  பிரிந்திசைப்பப்    பெயரும்    பெயருமாய்க்கூடியிசைப்ப,
வேற்றுமையுருபு நிலைபெறுவழியும்-வேற்றுமை செய்யும் உருபுகள் தொகாது
நிலைபெற்ற   இடத்தும்,    தோற்றம்   வேண்டாத்  தொகுதிக்கண்ணும் -
அவ்வேற்றுமை  யுருபுகள்  தோற்றுதல்  வேண்டாது   தொக்க  இடத்தும்,
ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி - தாம் பொருந்துதற் கேற்ப நடந்த
வழக்கோடே    பொருந்தி,    சொற்சிதர்மருங்கின்   -    சாரியைபெறும்
புணர்மொழிகளைப்  பிரித்துக்  காணுமிடத்து,  சாரியை இயற்கை வழிவந்து
விளங்காது  இடை   நின்று  இயலும்  -  அச்   சாரியையினது   தன்மை
அச்சொற்களின்பின்னே வந்து விளங்காது நடுவே நின்று நடக்கும்,


1. இச்சூத்திரத்திற்கு       உரையாசிரியரும்      நச்சினார்க்கினியரும்
கொண்ட பொருளை மறுத்துச் சேனாவரையர் "பெயரும் பெயரும் பெயரும்
தொழிலும்   பிரிந்திசைப்பவும்   ஒருங்கிசைப்பவும்  முறையே  வேற்றுமை
உருபுநிலை   பெற்றவிடத்தும்   மறைந்துநிற்கும்   தொகைக்   கண்ணும்"
என்று   பொருள்  கூறுவர்.  அவர்  கருத்து "பெயரும் பெயரும் பெயரும்
தொழிலும்      வேற்றுமையுருபு        நிலைபெற்றவழி    [விரிந்தவழி]
பிரிந்திசைக்குமென்பதும்,   தொக்கவழி   ஒருங்கிசைக்கு  மென்பதுமாகும்.
இதுவே நன்னூலார்க்குங் கருத்தாதல் பொதுவியலிற்  கூறிய தொகைநிலைச்
சூத்திரம் நோக்கி உணர்க.