142புணரியல்

உதாரணம் : பாலரிது  பாலாழி  ஆலிலை   பொருளீட்டம்  வானுலகு
வானூடு  வேலெறிந்தான்  வேலேற்றான்   பொருளையம்  பொருளொன்று
நாணோடிற்று சொல்லௌவியம் என வரும்.
 

ஒன்றென   முடித்த    லென்பதான்  இயல்பல்லாத  புள்ளி  முன்னர்
உயிர்வந்தாலும் இவ்  விதி  கொள்க.  அதனை  அதனொடு  நாடுரி  என
வரும்.  இவற்றைச்  'சுட்டுமுத  லுகர  மன்னொடு'  (எழு - 176)  'உரிவரு
காலை    நாழிக்    கிளவி'    (எழு - 240)   என்பனவற்றான்  முடிக்க.
புள்ளியீற்று   முன்னுமென  உம்மையை   மாறி   எச்ச   வும்மையாக்கிக்
குற்றியலுகரத்தின் முன்னரும் என அவ் விதி  கொள்க.  எனவே,  'குற்றிய
லுகரமு  மற்று'  (எழு - 105)  என்றதனோடும்  பொருந்திற்றாம்.  நாகரிது
வரகரிது என வரும்.
 

(36)
 

139.

1மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும்.
 

இஃது  உயிர்மெய்  புணர்ச்சிக்கண்  உயிர்நீங்கியவழிப்படுவதோர்  விதி
கூறுகின்றது.
 

இதன் பொருள்: மெய்    உயிர்     நீங்கின் - மெய்    தன்னோடு
கூடிநின்ற   உயிர்   புணர்ச்சியிடத்துப்   பிரித்து   வேறு   நின்றதாயின்,
தன்  உருவாகும் - தான்  முன்னர்ப்  பெற்று  நின்ற புள்ளிவடிவு  பெறும்
என்றவாறு,
 

ஆல் இலை, அதன் ஐ என வரும்.
 

உயிர் என்ன வடிவிற்றென்று   ஆசிரியர்   கூறாமையின்  உயிர்க்கண்
ஆராய்ச்சியின்று.
 

இனி   எகர   ஒகரங்களைப்   புள்ளியான்   வேற்றுமை   செய்தலின்
தொன்றுதொட்டு வழங்கின வடிவுடையவென்று கோடலுமாம்.  புணர்ச்சியுள்
உயிர்மெய்யினைப் பிரிப்பாராதலின் இது  கூறாக்காற்  குன்றக்கூறலாமென்று
உணர்க.
 

(37)
 

140.

எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே
யுடம்படுமெய்யி னுருவுகொளல்வரையார்.

1. மெய்யுயிர்   நீங்கிற்   றன்னுரு   வாகும்   என்று   மெய்யீற்றிற்கே
கூறினாராயினும்,     குற்றியலுகரத்திற்கும்       ஒன்றென   முடித்தலாற்
கொள்ளப்படும்.