144புணரியல்

141.

எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி
யிசையிற் றிரித னிலைஇய பண்பே.

 

இஃது எழுத்துக்கள் ஒன்று பலவாமென எய்தாத தெய்துவிக்கின்றது.
 

இதன் பொருள்: எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி - எழுத்து
ஒருதன்மைத்தான   பொருள்    விளங்க   நிற்கும்   புணர்   மொழிகள்,
இசையிற் றிரிதல்  நிலைஇய  பண்பு - எடுத்தல் படுத்தல்  நலிதலென்கின்ற
ஓசைவேற்றுமையாற் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற குணம் என்றவாறு.
 

உதாரணம் : செம்பொன்பதின்றொடி,    1செம்பருத்தி,    குறும்பரம்பு,
நாகன்றேவன்போத்து,   தாமரைக்கணியார்,   குன்றேறாமா   என  இவை
இசையிற் றிரிந்தன.
 

(39)
 

142.

அவைதாம்
முன்னப் பொருள புணர்ச்சி வாயி
னின்ன வென்னு மெழுத்துக்கட னிலவே.

 

இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.
 

இதன் பொருள்: அவைதாம் - பல     பொருட்குப்   பொதுவென்ற
புணர்மொழிகள்   தாம்,   முன்னப்பொருள்  -   குறிப்பான்    உணரும்
பொருண்மையினையுடைய,  புணர்ச்சிவாயின்   இன்ன வென்னும் எழுத்துக்
கடன்   இல -   புணர்ச்சியிடத்து   இத்தன்மைய   வென்னும்   எழுத்து
முறைமையை உடையவல்ல என்றவாறு.
 

செம்பொன்பதின்றொடி   என்றுழிப்     பொன்னாராய்ச்சி   யுளவழிப்
பொன்னெனவுஞ்   செம்பாராய்ச்சி   யுளவழிச்  செம்பெனவுங்  குறிப்பான்
உணரப்பட்டது.   இசையிற்   றிரி   தலென்றது   ஒலியெழுத்திற்கெனவும்
எழுத்துக்கடனில வென்றது வரிவடிவிற்கெனவுங் கொள்க.
 

(40)
 

புணரியல் முற்றிற்று.


1. செம்பு+அருத்தி.    அருத்தி-விருப்பம்.    செம்+பருத்தி    எனவும்
பிரியும். தாமரை+கண்ணியார். கண்ணி - மாலை, தாம்+அரைக்கு+அணியார்,
தா+மரைக்கு+அண்ணியார்,    தா+தாவல்,   இவ்வுதாரணம்  மகாலிங்கையர்
பதிப்பிலில்லை.