146தொகைமரபு

ஒற்றுக்கள்   நிரனிறைவகையானாம்,   அன்னமரபின்   மொழிவயினான -
அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய மொழிகளிடத்து என்றவாறு.
 

உதாரணம் : விளங்கோடு   செதிள்   தோல்   பூ   என வரும். இது
'மரப்பெயர்க்   கிளவி'     (எழு - 217)    என்பதான்   மெல்லெழுத்துப்
பெற்றது.  மரங்   குறிது   சிறிது   தீது   பெரிது   என   அல்வழிக்கட்
டிரியுமாறு    'அல்வழி     யெல்லாம்'      (எழு - 314)    என்பதனாற்
பெறுதுமேனும்    ஈண்டுத்     தோன்றுமென்றதனால்   நிலைமொழிக்கட்
டோன்றிநின்ற ஒற்றுத் திரிதல் கொள்க.  அன்னமரபின்  மொழியன்மையின்
1விளக்குறுமை விளக்குறைத்தான் என்புழி  மெல்லெழுத்துப் பெறாவாயின் ;
இவை   ஏழாவதும்     இரண்டாவதுந்  திரிதலின்.  இங்ஙனம்  எழுத்துப்
பெறுவனவுந் திரிவனவுமெல்லாம் வருமொழியேபற்றி வருமென்று உணர்க.
 

(1)
 

144.

ஞநம யவவெனு முதலாகு மொழியு
முயிர்முத லாகிய மொழியு முளப்பட
வன்றி யனைத்து மெல்லா வழியு
நின்ற சொன்மு னியல்பா கும்மே.
 

இது  முற்கூறிய   நால்வகைப்   புணர்ச்சியுள்   இயல்பு  புணருங்கால்
இக்கூறிய  பதினேழெழுத்தும்  வருமொழியாய்  வந்த   இடத்து  இருபத்து
நான்கீற்றின்  முன்னரும்   வேற்றுமையிலும்   அல்வழியிலும்   வருமொழி
இயல்பாய் முடிக வென்கின்றது.
 

இதன் பொருள்: ஞநமயவ  எனும்  முதலாகு  மொழியும் - ஞநமயவ
என்று  சொல்லப்படும்   எழுத்துக்கள்   முதலாய்   நிற்குஞ்  சொற்களும்,
உயிர்முதலாகிய    மொழியும்    உளப்பட - உயிரெழுத்து  முதலாய்நின்ற
சொற்களுந்    தம்மிற்கூட,    அன்றியனைத்தும்   -   அப்பதினேழாகிய
வருமொழிகளும், எல்லாவழியும் - வேற்றுமையும்  அல்வழியுமாகிய  எல்லா
இடத்தும்,     நின்றசொன்முன்   -    இருபத்துநான்கு    ஈற்றவாய்நின்ற
பெயர்ச்சொன்முன்னர், இயல்பாகும் -  திரிபின்றி  இயல்பு   புணர்ச்சியாய்
நிற்கும் என்றவாறு. 


1. விளக்குறுமை ஏழாவது, விளக்குறைத்தான் இரண்டாவது.