தொகைமரபு151

இதன் பொருள்: ஆவயினான - அல்வழிக்கண்   அங்ஙனந் திரியாது
நின்ற     அவ்வொற்றுக்கள்,     வேற்றுமைக்கண்ணும்  -   வேற்றுமைப்
பொருட்புணர்ச்சி  யிடத்தும்,   வல்லெழுத்   தல்   வழி  மேற்கூறியற்கை
- வல்லெழுத்தல்லாத இடத்து மேற் கூறிய இயல்பு முடிபாம் என்றவாறு.
 

எனவே, வல்லெழுத்து வந்துழித் திரியுமென்றாராயிற்று.
 

உதாரணம் : மண்   பொன்   என    நிறுத்தி,    ஞெகிழ்ச்சி  நீட்சி
மாட்சி யாப்பு வன்மை நுந்தையது அழகு ஆக்கம் இன்மை   என  ஏற்பன
கொணர்ந்து  ஒட்டுக.  இதுவுஞ்  1செய்கைச்   சூத்திரம்.   மேல்   நான்கு
சூத்திரத்தாற் கூறியன வல்லெழுத்து வந்துழித்  திரியுமாறு  தத்தம்  ஈற்றுட்
கூறுப.
 

(6)
 

149.

லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
தநவென வரிற் றனவா கும்மே.

 

இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுகின்றது.
 

இதன் பொருள்: ல  ன   என   வரூஉம்   புள்ளிமுன்னர் - லகார
னகாரமென்று  சொல்லவருகின்ற புள்ளிகளின் முன்னர், த ந என வரின் -
தகாரமும்  நகாரமும் முதலென்று சொல்லும்படியாகச் சில சொற்கள் வரின்,
றனவாகும்  -  நிரனிறையானே  அவை  றகார   னகாரங்களாகத்  திரியும்
என்றவாறு.
 

உதாரணம் : கஃறீது கன்னன்று  பொன்றீது  பொன்னன்று என வரும்.
நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப.
 

(7)
 

150.

ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள்: ணளவென்   புள்ளிமுன் - ணகார   ளகார மென்று
சொல்லப்படும் புள்ளிகளின்  முன்னர்  அதிகாரத்தால்  தகார  நகாரங்கள்
வருமெனின்,  டணவெனத்   தோன்றும்  - அவை  நிரனிறையானே டகார
ணகாரங்களாத் திரிந்து தோன்றும் என்றவாறு.


1. செய்கை - புணர்ச்சி ; கருவிச் சூத்திரமன்று என்றபடி.