தொகைமரபு153

152.

ஒளவென வரூஉ முயிரிறு சொல்லும்
ஞநமவ வென்னும் புள்ளி யிறுதியுங்
குற்றிய லுகரத் திறுதியு முளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. 
 

இஃது  எய்தியது   விலக்கிற்று,  முற்கூறியவற்றுட் சில ஆகாதனவற்றை
வரைந்து உணர்த்தலின்.
 

இதன் பொருள்: ஒளவென வரூஉம்  உயிரிறு சொல்லும் - ஒளவென
வருகின்ற   உயிரீற்றுச்   சொல்லும்,  ஞநமவ   என்னும்  புள்ளியிறுதியும்
- ஞநமவ     என்று      சொல்லப்படும்     புள்ளியீற்றுச்   சொல்லும்,
குற்றியலுகரத்து இறுதியும் - குற்றியலுகரத்தை இறுதியிலேயுடைய சொல்லும்,
முன்னிலை மொழிக்கு உளப்பட முற்றத் தோன்றா -  முன்னர்  முன்னிலை
மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறழ்ச்சியுமாகிய முடிபிற்கு முற்றத்
தோன்றா என்றவாறு.
 

முற்றவென்றதனான்   நிலைமொழி   உகரம்பெற்று  உறழ்ந்து  முடிதல்
கொள்க.
 

உதாரணம் : கௌவுகொற்றா     கௌவுக்கொற்றா,   வௌவுகொற்றா
வௌவுக்கொற்றா,   உரிஞுகொற்றா    உரிஞுக்கொற்றா,   பொருநுகொற்றா
பொருநுக்கொற்றா,   திருமுகொற்றா    திருமுக்கொற்றா,   தெவ்வுகொற்றா
தெவ்வுக்கொற்றா, 1கூட்டுக்கொற்றா கூட்டுக்கொற்றா என வரும்.
 

(10)
 

153.

உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும்
புள்ளி யிறுதி யுயர்திணைப் பெயரு
மெல்லா வழியு மியல்பென மொழிப. 

 

இஃது   உயர்திணைப்பெயர்   வன்கணம்   மென்கணம் இடைக்கணம்
உயிர்க்கண மென்னும்   நான்கு   கணத்தினும்   இருவழியும்   முடியுமாறு
கூறுகின்றது.
 

இதன்  பொருள்: உயிரீறாகிய   உயர்திணைப்பெயரும்  -  உயிரீறாய்
வந்த உயர்திணைப் பெயர்களும்,  புள்ளியிறுதி   உயர்திணைப்   பெயரும்
- புள்ளியீற்றினையுடைய உயர்திணைப்
 


1. குற்றியலுகரத்திறுதி.