இதன் பொருள்: மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் - 'மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே' (எழு - 217) என்றதனான் விளங்குறைத்தானென மெல்லெழுத்து மிகுமிடத்து விளக்குறைத்தானென வல்லெழுத்துத் தோன்றுதலும், வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் - 'மகர விறுதி' (எழு - 310) என்பதனான் மரக்குறைத்தான் என வல்லெழுத்து மிகுமிடத்து மரங்குறைத்தான் என மெல்லெழுத்துத் தோன்றுதலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் - 'தாயென் கிளவியியற்கை யாகும்' (எழு - 358) என்ற வழித் தாய்கொலை என இயல்பாய் வருமிடத்துத் தாய்க்கொலை என மிகுதி தோன்றலும், உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் - 'குறியதன் முன்னரும்' (எழு - 226) எனவுங் 'குற்றெழுத் திம்பரும்' (எழு - 267) எனவும் 'ஏயெ னிறுதிக்கு' (எழு - 277) எனவுங் கூறியவற்றான் உயிர்மிக்கு வருமிடத்துப் பலாக்குறைத்தான் கழுக்கொணர்ந்தான் ஏக்கட்டினான் என உயிர்கெட வருதலும், சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும் - 'வண்டும் பெண்டும்' (எழு - 420) என்பதனாற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டு கொணர்ந்தான் எனச் சாரியை கெட்டு நிற்றலும், சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும் - 'வண்டும் பெண்டும்' என்பதனாற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டினைக் கொணர்ந்தான் எனத் |