170தொகைமரபு

இதன் பொருள்: கலமென்  அளவே - கலமென்னும்  அளவுப்பெயர்
குறையோடு  புணருமிடத்து,  அத்துஇடை  வரூஉம்  -  அத்துச்  சாரியை
இடைவந்து புணரும் என்றவாறு.
 

கலத்துக்குறை.  இதனை  'அத்தே வற்றே'  (எழு - 133)  என்பதனான்
முடிக்க.   இதற்குக்   கலமுங்   குறையுமென்பது    பொருள்.   சாரியை
முற்கூறியவதனானே, முன் இன்சாரியை பெற்றவழி வல்லெழுத்து வீழ்க்க.
 

(26)
 

169.

பனையெ னளவுங் காவெ னிறையு
நினையுங் காலை யின்னொடு சிவணும்.

 

இதுவும் அது, வேற்றுமைவிதி விலக்கி இன் வகுத்தலின்.
 

இதன் பொருள்: பனையென்   அளவுங்    காவென்    நிறையும் -
பனையென்னும்    அளவுப்பெயருங்      காவென்னும்   நிறைய்பெயருங்
குறையென்பதனோடு புணருமிடத்து, நினையுங்காலை இன்னொடு சிவணும் -
ஆராயுங்காலத்து இன்சாரியை பெற்றுப் புணரும் என்றவாறு.
 

1பனையின்குறை காவின்குறை என வரும். இவையும்  உம்மைத்தொகை.
நினையுங்காலை  யென்பதனான்    வேற்றுமைக்கு    உரிய   விதியெய்தி
வல்லெழுத்துப் பெறுதலுஞ் சிறுபான்மை கொள்க.  பனைக்குறை  காக்குறை
என வரும்.
 

இத்துணையும்   அல்வழிமுடிபு.   இவற்றை  'வேற்றுமையல்வழி  இஐ'
(எழு -  158) என்னுஞ் சூத்திரத்திற் கூறாது வேறோதினார், இவை அளவும்
நிறையும் எண்ணுமாதலின்.
 

(27)
 

170.

அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி
யுளவெனப்பட்ட வொன்பதிற்றெழுத்தே
யவைதாங்
கசதப வென்றா நமவ வென்றா
வகர வுகரமோ டவையென மொழிப.

 

இது   முற்கூறிய   மூன்றனுள்   அளவிற்கும்   நிறைக்கும் மொழிக்கு
முதலாமெழுத்து இனைத்தென்கின்றது.
 

இதன் பொருள்: அளவிற்கும்     நிறையிற்கும்      மொழிமுதலாகி
உளவெனப்பட்ட ஒன்பதிற்றெழுத்தே - அளவுப்


1. இன்னும்  ஒரு  பனைப்  பொழுது  நிற்கிறது   என்பதனான்  பனை
அளவுப்பெயராதல் பெறப்படும்.