உருபியல்175

174.

பல்லவை நுதலிய வகர விறுபெயர்
வற்றொடு சிவண லெச்ச மின்றே.

 

இஃது  இன்   சாரியை விலக்கி  வற்று வகுத்தலின் எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி வகுக்கின்றது.
 

இதன் பொருள்: பல்லவை    நுதலிய      பெயரிறு     அகரம் -
பன்மைப்பொருளைக் கருதின பெயர்களின் இறுதி நின்ற அகரம், வற்றொடு
சிவணல் எச்சமின்று - வற்றுச் சாரியையோடு பொருந்துதலை ஒழிதலில்லை
என்றவாறு.
 

உதாரணம் : பல்லவற்றை பல்லவற்றொடு   பலவற்றை   பலவற்றொடு
சில்லவற்றை   சில்லவற்றொடு  சிலவற்றை   சிலவற்றொடு   உள்ளவற்றை
உள்ளவற்றொடு இல்லவற்றை இல்லவற்றொடு என ஒட்டுக.
 

எச்சமின்றி   என்றதனானே 1மேல்   இன்   பெற்றன   பிறசாரியையும்
பெறுதல் கொள்க. நிலாத்தை துலாத்தை மகத்தை   என   வரும். இன்னும்
இதனானே பல்லவை நுதலியவற்றின் கண்  முன்றாமுருபு   வற்றுப்பெற்றே
முடிதல் கொள்க.
 

(2)
 

175.

யாவென் வினாவு மாயிய றிரியாது.
 

இஃது  ஆகார   ஈற்றுள்   ஒன்றற்கு   எய்தியது விலக்கிப் பிறிதுவிதி
வகுத்தது.
 

இதன் பொருள்: யாவென்  வினாவும் - யாவென்று   சொல்லப்படும்
ஆகார  ஈற்று   வினாப்பெயரும்,   ஆயியல்   திரியாது   -   முற்கூறிய
வற்றுப்பேற்றிற் றிரியாது என்றவாறு.
 

யாவற்றை யாவற்றொடு என வரும்.
 

(3)
 

176.

சுட்டுமுத லுகர மன்னொடு சிவணி
யொட்டிய மெய்யொழித் துகரங்கெடுமே.

 

இஃது உகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள்: சுட்டுமுதல்   உகரம்     அன்னொடு    சிவணி -
சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச்சொல்


1. மேல் என்றது உருபியல் 1 - ஞ் சூத்திரத்தை.