குறுகி இகரமாம், ஆவயின் னகரம் ஒற்றாகும் - அவ்விடத்துவரும் னகரம் ஒற்றாய் நிற்கும் என்றவாறு. |
உதாரணம் : நின்னை நின்னொடு நினக்கு எனச் செய்கையறிந்து ஒட்டுக. நினக்கு என்பதற்கு 'ஆற னுருபினு நான்கனுருபினும்' (எழு - 161) 'வல்லெழுத்து முதலிய' (எழு - 114) என்பன கொணர்ந்து முடிக்க. நினதென்பதற்கு 'ஆறனுருபி னகரக் கிளவி' (எழு - 115) என்பதனான் முடிக்க. நின்னென்பது வேறொரு பெயரோ எனக் கருதுதலை விலக்குதற்கு ஒருபெயரென்றார். பெயர் குறுகுமென்னாது முதல் குறுகுமென்றத அப்பெயரின் 1எழுத்தின்கண்ணது குறுக்கமென்றற்கு நெடுமுதலெனவே நகரங்குறுகுதலை விலக்கிற்று. 2உயிர்மெய் யொற்றுமைபற்றி நெடியது முதலாயிற்று. 'உடைமையு மின்மையு மொடுவயி னொக்கும்' (எழு - 132) என்றதனை நோக்கி ஒடுவிடத்துச் சாரியைபெற்றே வந்த அதிகாரத்தை மாற்றுதற்குச் சாரியைப் பேற்றிடை 3எழுத்துப்பேறு கூறினார். |
(7) |
180. | ஓகார விறுதிக் கொன்னே சாரியை. |
|
இஃது ஓகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது. |
இதன் பொருள்: ஒகார இறுதிக்கு ஒன்னே சாரியை - ஓகார ஈற்றிற்கு இடைவருஞ்சாரியை ஒன்சாரியை என்றவாறு. |
கோஒனை கோஒனொடு என ஒட்டுக. ஒன்னேயென்ற ஏகாரத்தாற் பெரும்பான்மையாக வருஞ் சாரியை ஒன்னே, சிறுபான்மை இன்சாரியை வருமென்று கொள்க. 'ஒன்றாகநின்றகோவினை யடர்க்கவந்த' எனவும், கோவினை கோவினொடு சோவினை சோவினொடு ஓவினை ஓவினொடு எனவும் வரும். |
ஓவென்பது மதகுநீர் தாங்கும் பலகை. |
(8) |
181. | அ ஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக் கத்தொடுஞ் சிவணு மேழ னுருபே. |
|
1. எழுத்து என்றது ஈகார உயிரை. |
2. உயிர்மெய் - நீ. |
3. எழுத்துப்பேறு என்றது இச் சூத்திரத்தாற் கூறிய னகரத்தை. |