இஃது அகர ஆகார ஈற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
இதன் பொருள்: அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு - அஆவென்று சொல்லப்படும் மரத்தை உணர்த்துகின்ற பெயராகிய சொல்லிற்கு, ஏழனுருபு அத்தொடுஞ் சிவணும் - ஏழாமுருபு இன்னோடன்றி அத்தோடும் பொருந்தும் என்றவாறு. |
உதாரணம் : விளவத்துக்கண் பலாவத்துக்கண் எனவரும். |
'வல்லெழுத்து முதலிய' (எழு - 114) என்பதனான் வல்லெழுத்துக் கொடுத்துத் 'தெற்றென் றற்றே' (எழு - 133) என்பதனான் 'அத்தி னகர மகரமுனை' (எழு - 125)க் |
கெடாமைச் செய்கைசெய்து முடிக்க. |
(9) |
182. | ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை. |
|
இது புள்ளியீற்றுள் ஞகார ஈறும் நகார ஈறும் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: ஞந என் புள்ளிக்கு இன்னே சாரியை - ஞ ந வென்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வருஞ்சாரியை இன்சாரியை என்றவாறு. |
உதாரணம் : உரிஞினை உரிஞினொடு பொருநினை பொருநினொடு என ஒட்டுக. |
(10) |
183. | சுட்டுமுதல் வகர மையு மெய்யுங் கெட்ட விறுதி யியற்றிரி பின்றே. |
|
இது நான்குமொழிக்கு ஈறாம் வகர ஈற்றுட் சுட்டுமுதல் வகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்: சுட்டுமுதல் வகரம் - அவ் இவ் உவ் என்னுஞ் சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுச் சொல், ஐயும் மெய்யுங் கெட்ட இறுதியியல் திரிபின்று - ஐகாரமும் ஐகாரத்தான் ஊரப்பட்ட மெய்யுங் கெட்டு வற்றுப்பெற்று முடிந்த யாவை (எழு - 178) என்னும் ஐகார ஈற்றுச் சொல் லியல்பில் திரிபின்றி வற்றுப்பெற்று முடியும் என்றவாறு. |