182உருபியல்

யாமென்   இறுதி ஆ எ - ஆகும் -  யாமென்னும்  மகரஈற்றுச் சொல்லில்
ஆகாரம்   எகாரமாம்,   ஆவயின்   யகரமெய்  கெடுதல்   வேண்டும் -
அவ்விடத்து   நின்ற யகரமாகிய  மெய்  கெடுதலை விரும்பும்  ஆசிரியன்,
ஏனை இரண்டும்  நெடுமுதல்   குறுகும்  -  ஒழிந்த  தாம்   நாமென்னும்
இரண்டும் நெடியவாகிய முதல் குறுகித் தம் நம் என நிற்கும் என்றவாறு.
 

உதாரணம் : தம்மை  தம்மொடு நம்மை  நம்மொடு எம்மை எம்மொடு
என ஆறு உருபோடும்  ஒட்டுக. ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்குங் கருவி
யறிந்து முடிக்க.
 

மெய்யென்றதனாற்   பிறவயின்மெய்யுங்   கெடுக்க.  தங்கண்  நங்கண்
எங்கண் என ஏழனுருபின்கண் மகரங்கெடுத்து 'வல்லெழுத்து முதலிய' (எழு
- 114) என்பதனான் மெல்லெழுத்துக் கொடுக்க.
 

(16)
 

189.

எல்லா மென்னு மிறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்று
மும்மை நிலையு மிறுதி யான.

 

இது  மகர  ஈற்றுள்  ஒன்றற்கு   எய்தியது  விலக்கிப்   பிறிது   விதி
வகுக்கின்றது.
 

இதன் பொருள் :எல்லா  மென்னும் இறுதி முன்னர் வற்றென்சாரியை
முற்றத்தோன்றும்   -  எல்லாமென்னும்   மகர   ஈற்றுச்சொன்   முன்னர்
அத்தும்   இன்னும்  அன்றி   வற்றென்னுஞ்   சாரியை   முடியத்தோன்றி
முடியும், உம்மை  நிலையும் இறுதியான - ஆண்டு  உம்மென்னுஞ் சாரியை
இறுதிக்கண் நிலைபெறும் என்றவாறு.
 

மகரம் வற்றின்மிசை யொற்றெனக் கெடுக்க.
 

எல்லாவற்றையும்  எல்லாவற்றினும் எல்லாவற்றுக்கண்ணும் என  வரும்.
முற்றவென்றதனான்  1ஏனை      முற்றுகரத்திற்கும்   உம்மின்    உகரங்
கெடுத்துக்கொள்க.         எல்லாவற்றொடும்          எல்லாவற்றுக்கும்
எல்லாவற்றதும் என வரும். முற்றுகரமாதலின் ஏறி முடியா.
 

(17)

1. ஏனை முற்றுகரம் என்றது, ஒடு, கு, அது என்பவற்றை.