186உருபியல்

1எற்றை    என்புழி    நிலைமொழிவகரம்    இதனாற்    கெடுக்க.  இனி
ஒத்ததென்றதனால்  எகின்   என  நிறுத்தி  அத்தும் இன்னுங் கொடுத்துச்
செய்கைசெய்து   எகினத்தை  எகினை   என   ஒட்டுக.   அத்து  இனிது
இசைத்தலின் முற்கூறினார்.
 

(21)
 

194.

அன்னென் சாரியை யேழ னிறுதி
முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப.

 

இஃது  ஏழென்னும்  எண்ணுப்பெயர்  அன்சாரியை  பெற்றுப்  புணர்க
என்கின்றது.
 

இதன் பொருள் :  அன்னென் சாரியை ஏழனிறுதி முன்னர்த்தோன்றும்
இயற்கைத்    தென்ப    -    அன்னென்னுஞ்    சாரியை   ஏழென்னும்
எண்ணுப்பெயரின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத்தென்று கூறுவர்
ஆசிரியர் என்றவாறு.
 

உதாரணம் :ஏழனை  ஏழற்கு  ஏழனின்  என்க. ஏனையுருபுகளோடுஞ்
செய்கை யறிந்து ஒட்டுக. சாரியை  முற்கூறியவதனாற் பிறவும் அன்பெறுவன
கொள்க. பூழனை யாழனை என ஏனையவற்றோடும் ஒட்டுக. மேல்வருகின்ற
இன்சாரியையைச் சேரவைத்தமையான்  அவையெல்லாம் இன்சாரியைபெற்று
வருதலுங் கொள்க. ஏழினை பூழினை யாழினை என வரும்.
 

(22)
 

195.

குற்றிய லுகரத் திறுதி முன்னர்
முற்றத் தோன்று மின்னென் சாரியை.

 

இது குற்றுகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் :குற்றியலுகரத்து இறுதி முன்னர் - குற்றியலுகரமாகிய
ஈற்றின்    முன்னர்,     முற்றத்    தோன்றும்   இன்னென்  சாரியை  -
முடியத்தோன்றும் இன்னென்னுஞ் சாரியை என்றவாறு.
 

உதாரணம் :நாகினை  நாகினொடு, வரகினை வரகினொடு என வரும்.
ஏனையவற்றோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக.
 

முற்ற என்றதனானே  பிறசாரியை பெறுவனவுங்  கொள்க. 2வழக்கத்தாற்
பாட்டாராய்ந்தா னெனவுங், கரியதனை எனவும் வரும்.
 

(23)

1. எற்றை  என்பதில்   நிலைமொழி   வகரங்  கெட்டதற்கு   விதியும்
'தோன்றல்' என்பது.
 

2. வழக்கு,  கரியது   என்பன   குற்றுகரங்கள்   அத்தும்   அன்னும்
பெற்றன.