பகரவொற்றை நிறுத்தி ஆன்சாரியை கொடுத்து ஒருபானை இருபானை என எல்லா எண்ணொடும் எல்லா உருபினையுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உம்மை எதிர்மறையாதலின் ஒருபஃதனை இருபஃதனை என எல்லாவற்றோடும் ஒட்டுக. |
சொல்லுங்காலை என்றதனாற் பத்தூர் கிளவியேயன்றி 1'ஒன்பான் முதனிலை' (எழு - 463) 'ஒன்பாற் கொற்றிடைமிகுமே' (எழு - 475) என்றாற்போல வருவனவற்றின்கண்ணும் பகரத்துள் அகரம்பிரித்து அஃதென்பது கெடுத்து ஆன் கொடுக்க. |
(27) |
200. | யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய வாய்த விறுதியு மன்னொடு சிவணு மாய்தங் கெடுத லாவயி னான. |
|
இஃது எண்ணுப்பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : யாது என் இறுதியும் - யாதென வருங் குற்றுகர ஈறும், சுட்டுமுதலாகிய ஆய்த இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன்னொடு சிவணும் - அன்சாரியையோடு பொருந்தும், ஆவயின் ஆன ஆய்தங் கெடுதல் - அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும் என்றவாறு. |
யாதனை யாதனொடு எனவும், அதனை அதனொடு, இதனை இதனொடு, உதனை உதனொடு எனவும் வரும். |
(28) |
201. | ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி யியற்கையு மாகு மாவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே. |
|
இதுவுங் குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு ஏழனுருபோடு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : திசைப்பெயர் முன்னர் ஏழனுருபிற்கு - திசைப்பெயர்களின் முன்னர் வந்த கண்ணென்னும் உருபிற்கு முடிபு கூறுங்கால், சாரியைக் கிளவி இயற்கையுமாகும் - முன் கூறிய இன்சாரியையாகிய சொல் நின்று முடிதலே |
|
1. 'ஒன்பான் முதனிலை' என்பது, ஒன்பஃது ஆன் பெற்றதற்கு உதாரணம். ஏனையவுமன்ன. |