7. உயிர் மயங்கியல் |
203. | அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றிற் றத்த மொத்த வொற்றிடை மிகுமே. |
|
என்பது சூத்திரம். உயிரீறு நின்று வன்கணத்தோடுஞ் சிறுபான்மை ஏனைக் கணங்களோடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தினமையின் இவ்வோத்து உயிர்மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. மேற் பெயரோடு உருபு புணருமாறு கூறிப் பெயர்வருவழி உருபு தொக்குநின்ற பொருட்புணர்ச்சி கூறுகின்றமையின் உருபியலோடு இயைபுடைத்தாயிற்று. |
இச் சூத்திரம் அகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் வன்கணத்தோடு புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் :அகர இறுதிப் பெயர்நிலை முன்னர் - அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச்சொன் முன்னர், வேற்றுமையல்வழிக் கசதபத் தோன்றின் - வேற்றுமையல்லா தவிடத்துக் கசதப முதன்மொழிகள் வருமொழியாய்த் தோன்றுமாயின், தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும் - தத்தமக்குப் பொருந்திய அக் கசதபக்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் என்றவாறு. |
உதாரணம் : விளக்குறிது நுணக்குறிது அதற்குறிது சிறிது தீது பெரிது என ஒட்டுக. இவை அஃறிணை இயற்பெயராகிய எழுவாய் வினைக்குறிப்புப் பண்பாகிய பயனிலையோடு முடிந்தன. |
ஒத்தவென்றமையாது 1தத்தமொத்த என்றதனான் அகர ஈற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கும் மெல்லெழுத்து மிக்கும் முடியும் முடிபும் அகரந் 2தன்னை உணரநின்றவழி வன்கணத்தோடு மிக்கு முடியும் முடிபுங் கொள்க. தடக்கை |
|
1. தத்தம் ஒற்றெனின் வல்லினத்திற் கினமாகிய மெல்லெழுத்துக்களையுங் குறிக்கும். அவ்வாறு கருதாமல் தத்தம் ஒத்த ஒற்றென்றாரென்று பொருள்கோடல் சிறப்பாகும். |
2. தன்னை - எழுத்தாகிய தன்னை என்க. அஃறிணை இயற்பெயரென்றது, பால்பகா வஃறிணைப்பெயரை. விள, நுண என்பன பால்பகா வஃறிணைப்பெயர். அவை எழுவாயாய் நின்று குறிது, |