உயிர்மயங்கியல்195

206.

யவமுன் வரினே வகர மொற்றும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள்:  யவ   முன்வரின்   -   யகர  வகர முதன்மொழி
அகரச்சுட்டின்  முன்னே வரின்,  வகரம்  ஒற்றும்  -  இடைக்கண்  வகரம்
ஒற்றாம் என்றவாறு.
 

உதாரணம் :அவ்யாழ் அவ்வளை என வரும்.
 

வருமொழி  முற்கூறியவதனால்  அகரந்  தன்னையுணர  நின்ற வழியும்
வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும்.
 

(4)
 

207.

உயிர்முன் வரினு மாயிய றிரியாது.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் :  உயிர்முன்  வரினும் ஆயியல் திரியாது - உயிர்கள்
அகரச்சுட்டின்முன்  வரினும்  முற்கூறிய  வகரம்  மிக்கு  வரும்  இயல்பிற்
றிரியாது என்றவாறு.
 

அ என நின்ற சுட்டின் முன்னர்  அடை என வருவித்து வகரம் ஒற்றித்
தன்னுரு இரட்டி  உயிரேற்றி அவ்வடை அவ்வாடை அவ்விலை அவ்வீயம்
அவ்வுரல் அவ்வூர்தி அவ்வெழு  அவ்வேணி அவ்வையம் அவ்வொழுக்கம்
அவ்வோடை அவ்வௌவியம் என ஒட்டுக.
 

'நெடியதன்   முன்னர்'    (எழு - 160)    என்பதனுள்    'நெறியியல்'
என்றதனான்     இரட்டுதல்    கூறினமையின்,    அது    நிலைமொழித்
தொழிலென்பது   பெறப்பட்டது.  வருமொழி   முற்கூறியவதனான்  அகரந்
தன்னை யுணரநின்ற  வழியும் வகரம் மிகுதல்  கொள்க. அவ்வழகிது  என
வரும். திரியாதென்றதனான் மேற் சுட்டுநீண்டவழி வகரக்கேடு கொள்க.
 

(5)
 

208.

நீட வருதல் செய்யுளு ளுரித்தே.
 

இஃது எய்தியது விலக்கிச் செய்யுட்கு ஆவதோர் விதி கூறுகின்றது.
 

இதன் பொருள் :  நீட   வருதல்   செய்யுளுள்  உரித்து  -  அகரச்
சுட்டு நீடவருதல் செய்யுளிடத்து உரித்து என்றவாறு.