உதாரணம் : 'ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே' (சொல் - 1) 'ஆயிரு பாற்சொல்' (சொல் - 3) என வரும். இது 1வருமொழி வரையாது கூறலின் வன்கணம் ஒழிந்தகணம் எல்லாவற்றோடுஞ் சென்றது. அவற்றிற்கு உதாரணம் வந்தவழிக் காண்க. இந்நீட்சி இருமொழிப் புணர்ச்சிக்கண் வருதலின் 'நீட்டும்வழி நீட்டல்' ஆகாமை உணர்க. |
(6) |
209. | சாவ வென்னுஞ் செயவெ னெச்சத் திறுதி வகரங் கெடுதலு முரித்தே. |
|
இது மேல் வினையெஞ்சுகிளவி என்ற எச்சத்திற்கு எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் :சாவ என்னுஞ் செயவென் எச்சத்து இறுதி வகரம் - சாவவென்று சொல்லப்படுஞ் செயவெனெச்சத்து இறுதிக்கண் நின்ற அகரமும் அதனாற் பற்றப்பட்ட வகரமும், கெடுதலும் உரித்து - கெட்டுநிற்றலுங் கெடாதுநிற்றலும் உரித்து என்றவாறு. |
உதாரணம்:கோட்டிடைச் சாக்குத்தினான் என வரும். சீறினான் தகர்த்தான் புடைத்தான் என ஒட்டுக. 2கெடாதது முன்னர் முடித்தாம். |
இதனை 'வினையெஞ்சு கிளவி' (எழு - 204) என்றதன்பின் வையாததனான் இயல்புகணத்தும் இந்நிலைமொழிக்கேடு கொள்க. சாஞான்றான் நீண்டான் மாண்டான் யாத்தான் வீழ்த்தான் அடைந்தான் என ஒட்டுக. |
(7) |
210. | அன்ன வென்னு முவமக் கிளவியு மண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியுஞ் செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லு மேவல் கண்ணிய வியங்கோட் கிளவியுஞ் செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியுஞ் |
|
1. வருமொழி வரையாது கூறியதென்றது, சூத்திரத்தில் நீடவருதற்கு வருமொழி வரையறை கூறாமையை. நீட்டும் வழி நீட்டல் ஒருமொழிக்கண் வரும். |
2. முன்னர் முடித்தாம் என்றது, 'வினையெஞ்சு கிளவியும்' என்னும் சூத்திரத்துள் முடித்தமையை. |
(204) |