உயிர்மயங்கியல்211

உதாரணம் :  யாஅக்கோடு   பிடாஅக்கோடு  தளாஅக்கோடு செதிள்
தோல்  பூ   என  வரும்.   மானமில்லை   என்றதனால்  இம்மூன்றற்கும்
உருபிற்குச்சென்ற  சாரியை  பொருட்கட்  சென்றுழி இயைபு  வல்லெழுத்து
வீழ்க்க. யாவின்கோடு பிடாவின்கோடு தளாவின்கோடு என வரும். சாரியை
பெறவே அகரம் வீழ்ந்தது.
 

இன்னும்      இதனானே     யாஅத்துக்கோடு     பிடாஅத்துக்கோடு
தளாஅத்துக்கோடு   என   அத்துப்    பெறுதலுங்   கொள்க,  1அகரமும்
வல்லெழுத்தும் பெறுதலின்.
 

யாமரக்  கிளவி  யென்பதனைக் 'குறியதன்    முன்னர்' (எழு  -  226)
என்பதன்பின்   வையாதவதனான்    இராவிற்   கொண்டான்    நிலாவிற்
கொண்டான்  என   உருபிற்குச்சென்ற   சாரியை  பொருட்கட்  சென்றுழி
இயைபு வல்லெழுத்து வீழ்க்க.
 

(28)
 

231.

மாமரக் கிளவியு மாவு மாவு
மாமுப் பெயரு மவற்றோ ரன்ன
வகரம் வல்லெழுத் தவையவ ணிலையா
னகர மொற்று மாவு மாவும்.

 

இஃது  எய்தியது  விலக்கி  எய்தாத  தெய்துவித்தது.   இம்  மூன்றும்
வல்லெழுத்துப்  பெறா   என்றலின்  எய்தியது  விலக்கிற்று.  மாமரத்துக்கு
அகரமும்   ஙஞநம   ஒற்றும்  ஏனையவற்றிற்கு  னகர  ஒற்றும்  எய்தாத
தெய்துவித்தது.
 

இதன் பொருள் :  மாமரக்   கிளவியும்   ஆவும்    மாவும்   ஆம்
முப்பெயரும்   அவற்றோரன்ன  -  மாமரமாகிய சொல்லும்  ஆவென்னுஞ்
சொல்லும்  மாவென்னுஞ்சொல்லுமாகிய மூன்று பெயரும்  யாமரம்  முதலிய
மூன்றோடும் ஒருதன்மையவாய் மெல்லெழுத்துப்  பெற்று  முடியும். ஆவும்
மாவும் அகரம்


1. அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின் என்றது, யா முதலிய இவைகள்
உயிர் 24-ஞ் சூத்திரத்தானே  அகரமும், இச்  சூத்திரத்தால் வல்லெழுத்தும்
பெறுதலின்,  அத்துப் பெறுதலுங்  கொள்க என்றபடி. என்னை ? அகரமும்
வல்லெழுத்தும் பெறுவன அத்தும் பெறுமாதலின். (சூத். 24 நோக்குக.) இனி,
அத்தின்   முதலெழுத்தும்   அகரமாதலானும்,   அத்து    வல்லெழுத்தும்
பெறுதலானும் என்பது கருத்தாகக் கொள்ளினுமாம்.