216உயிர்மயங்கியல்

நின்ற  என்றதனால்  வினையெச்சத்திற்குமுன்   எய்திய  வல்லெழுத்து
வீழ்க்க.
 

தொன்றியதன்    மருங்கின்   என்றதனான்   அன்றி   யென்பதூஉஞ்
செய்யுளில்  இம்முடிவு  எய்துதல்  கொள்க. ' இடனன்று  துறத்தல்  வல்லி
யோரே'  வாளன்று  பிடியா   வன்கணாடவர்',  'நாளன்றுபோகி'  (புறம் -
124) என வரும். முற்றியலிகரந்திரிந்து குற்றியலுகரமாய் நின்றது.
 

(35)
 

238.

சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே.
 

இஃது  இகர  ஈற்றுச்  சுட்டுப்பெயர்   இயல்புகணத்தோடு  முடியுமாறு
கூறுதலின் எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள்சுட்டின்  இயற்கை - இகர ஈற்றுச் சுட்டின் இயல்பு,
முன் கிளந்தற்று  -  முன்  அகர  ஈற்றுச் சுட்டிற்குக் கூறிய தன்மைத்தாம்
என்றவாறு.
 

என்றது  'சுட்டின்  முன்னர்  ஞநமத்  தோன்றி' (எழு - 205)  என்பது
முதலிய   நான்கு   சூத்திரத்தானுங்   கூறிய   இலக்கணங்களை   அவை
மென்கணத்து மெல்லெழுத்து மிகுதலும் இடைக்கணத்தும்  உயிர்க்கணத்தும்
வகரம்பெறுதலுஞ் செய்யுட்கண் வகரங் கெட்டுச் சுட்டு நீடலுமாம்.
 

இஞ்ஞாண்  நூல் மணி எனவும், இவ்யாழ் இவ்வட்டு எனவும், இவ்வடை
இவ்வாடை இவ்விலை இவ்வீயம் இவ்வுரல் இவ்வூர்தி இவ்வெழு இவ்வேணி
இவ்வையம் இவ்வொடு  இவ்வோக்கம் இவ்வௌவியம் எனவும்  ஈவயினான
எனவும் வரும்.
 

1'ஈகாண் டோன்றுமெஞ் சிறுநல் லூரே'
 

என்றதும்,
 

'கள்வனோ வல்லன் கணவனென் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே யீதொன்று'

(சிலப். ஊர்சூழ்வரி - 7)
 

என்றதும் இதுவென்னுஞ் சுட்டு முதல் உகர ஈறாதலின் அது செய்யுளகத்துப்
புறனடையான் முடியுமென உணர்க.
 

(36)

1. இதுகாண் என்பது ஈகாண் என்றாயிற்று. ஈது என்பதும் இது என்பதன்
திரிபு.